Wednesday, December 31, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய தரிசனம்) -27

மீண்டும் இந்தியப்பகுதியில்

23ம் நாள் கூஞ்சியிலிருந்து புத்தி வரை நடைப்பயணம்


சிவ சக்தி தரிசனம் பெற்று திரும்பி வரும் போது
சிறிய கைலாயத்தின்
அற்புத தரிசனம்
*******


அப்பர் பெருமான் அருளிச்செய்த
போற்றித் திருத்தாண்டகம்


திருக்கயிலாயம்

செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி

செல்லாத செல்வமுடையாய் போற்றி

ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி

ஆகாய வண்ணமுடையாய்ப் போற்றி

வெய்யாய் தணியா யணியாய் போற்றி

வேளாத வேள்வி யுடையாய் போற்றி

கையார் தழலார் விடங்கா போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி (24)


************



கூஞ்சி ( Gunji ) மூகாமிலிருந்து கிளம்பியதும் கிராமம், கிராமத்தை தாண்டியதும் நல்ல இறக்கம், பின் காளி நதியைக் கடந்து, ஆதி கைலாயத்தை ( சிறிய கைலாயம்) தரிசனம் செய்து பின் டிங்கர், காளி நதிகளின் சங்கமம் பார்த்து, பைன் மரங்களுக்கிடையில் சென்ற பாதையில் பல்வேறு முறை ஏறியும் இறங்கியும் நடந்து, காளி நதியின் வேகம் கூடுவதையும் ரசித்து பின் பூக்களின் சமவெளியில் பல்வேறு பூக்களை புகைப்படம் எடுத்தோம். வழியில் காளி நதியில் அமைக்கப்பட்டுள்ள மாவரைக்கும் இயந்திரங்களைக் கண்டு அக்காலத்திலேயே தண்ணீரின் சக்தியை பயன்படுத்தி இயந்திரங்களை அமைத்த பொறியியல் அறிவை வியக்காமல் இருக்க முடியவில்லை. மீண்டும் மூழ்கும் கிராமமாம் கர்பியாங்கை கடந்து, எல்லா குழுவினருக்கும் திருக்கயிலாயம் செல்லும் குழுவினருடன் சந்திப்பு ஏற்படும், ஆனால் இறுதிக்குழு (16வது குழு) முன்னரே சென்று விட்டதால் நாங்கள் மட்டும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு பின் நடந்தோம்.
யாத்திரை முடித்து திரும்பி வரும் போது
கர்பியாங்கில் அடியேன் தனுஷ்கோடி மற்றும் தபஸ்வி



அன்னபூர சிகரங்களை தரிசித்து, அனைத்து உயிர்களுக்கும் அன்னமாம் உணவு அளிக்கும் அன்னபூரணிக்கு ஆயிரம் நன்றிகள் கூறினோம். பின் பூசமவெளியை கடந்து சியாலே (Chiyaleh) வந்தடைந்தோம். அதற்க்கு பின் நல்ல இறக்கம் உண்மையான முழங்கால் முறிச்சான். பின் ஆப்பிள் மரங்கள் நிறைந்த புத்திக்குள் ( Budhi) வந்து சேர்ந்தோம்.

************


24ம் நாள் புத்தியிலிருந்து மாங்டி நடைபயணம்,
பின் தாருசூலா வரை பேருந்தில்




அப்பர் பெருமான் அருளிச்செய்த
போற்றித் திருத்தாண்டகம்


திருக்கயிலாயம்


ஆட்சி யுலகை யுடையாய் போற்றி

அடியார்க் கமுதெலா மீவாய் போற்றி

சூட்சி சிறிது மிலாதாய் போற்றி

சூழ்ந்த கடல்நஞ்சு உண்டாய் போற்றி

மாட்சி பெரிது முடையாய் போற்றி

மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி

காட்சி பெரிதும் அரியாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி (25)


*********



புத்தியிலிருந்து நாங்கள் கிளம்பிய போது மழைத்தூறல்கள் பாதை வழுக்கலாக இருந்தது, மற்றும் நீர் வீழ்ச்சிகளில் அதிக நீரோட்டம் இருக்குமே என்று சிறிது பயந்தோம். ஆனால் இறையருளால் சுமார் பதினைந்து மிடங்களில் மழை நின்று விட்டது. காளியானவள் நாம் யாத்திரையை முடித்து விட்டு செல்வதால் கோபம் கொண்டவள் போல் தோன்றியது, நடுவில் மால்பா என்னும் இடத்திற்கு அருகில் இரண்டு நாட்களுக்கு முன் தான் ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது அதில் 16வது குழுவினரின் ஒரு கோவேறுக் கழுதை ஆற்றில் விழுந்து பின் கீழே சென்று தப்பித்ததாக செய்தி வந்திருந்தது, குதிரையின் மேல் இருந்த பொருட்கள் ஆற்றில் அடித்துச் செல்ல பட்டன.

மால்பா அருகே நேபாள பகுதியின் நிலச்சரிவு

எனவே நாங்கள் கவனத்துடனும் அதே சமயம் வேகமாகவும் இறங்கினோம். சென்ற போது இருந்ததை விட வரும் போது நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் குறைவாகவே இருந்தது. இன்று சிறிது கவலையும் வந்தது, இந்த ஒரு மாதமாக ஒன்றாக இருந்த அனைவரும் பிரிந்து அவரவர் இடத்திற்கு செல்லப்போகிறோமே என்று. அப்படி ஒரு நெருக்கம் எங்களுக்குள் ஏற்பட்டிருந்தது. மதிய உணவு வேளையில் மாங்டி கால்வாயை அடைந்தோம். நடைப்பயணத்தின் இறுதியிலும் இறைவன் வருண பகவானை அனுப்பி எங்களை ஆžர்வதித்தார்.

எங்களுக்காக சிறிய பேருந்து காத்து நின்றது உணவுடன். இதுவரை கூடவே இருந்து நடைப்பயணத்தின் போது சிற்றுண்டியும், தேனீரும் அளித்து, பாதுகாப்பும் அளித்த ITBPயினருக்கு மிகுந்த நன்றி கூறி விடையளித்து, அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி, போர்ட்டருக்கும், குதிரைகாரர்களுக்கும் சிறு பரிசுகள் அளித்து மாங்டியிலிருந்து புறப்பட்டோம். வரும் வழியில் இது தான் பாங்லா நீர்வீழ்ச்சி, இது ஜெஸ்கூ இங்கு தான் இரவு தங்கினோம் என்று எல்லா இடங்களையும் நினைவு கூர்ந்து கொண்டும் நீர்வீழ்ச்சிகளின் அழகை ரசித்துக் கொண்டும் தாருசூலா வந்தடைந்தோம். ஆதியும் அந்தமும் இல்லாத அந்த அருட்பெரும் ஜோதியை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலினால் சென்ற போது அதிகமாக இயற்கை அழகை ரசிக்கவில்லை, இப்போது இமய மலையின் அழகை முழுதுமாக ரசித்தோம்.

இந்திய நேபாளப்பகுதிகளை இனைக்கும் நட்புப் பாலம்

தாருசூலாவில் அன்று இரவு தங்கினோம். பகலில் நேபாள தாருசூலாவிற்கு நட்பு பாலம் மூலம் சென்று பார்த்து விட்டு வந்தோம். கைலாயம் செல்லும் போது அவசரத்தில் கவனிக்கவில்லை, KMVN சுற்றுலாவிடுதி காளி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, ஆற்றின் பக்கம் அமைந்துள்ள அறைகளிலிருந்து அருமையான காட்சி கிடைத்தது. இரவு சுற்றுலா விடுதியின் முற்றத்தில் அமர்ந்து பஜனை மற்றும் பூஜைகள் செய்தோம்


யாத்திரையின் 24ம் நாள் நடைப்பயணம் நிறைவு பெற்ற நாள்.

Tuesday, December 09, 2008

Kailash Manasarovar darshan (yatra) - 26

Return Journey

21St day trek from Lipu Leh pass to Kalapani



Wonderful return journey

By the benign grace of the Shivasakthi, we were selcted for their darshan and had a very good darshan and did the parikrama and bathed in Holy Manasarovar and returned back to India without any problem.

As we approached the last steep we could see the incoming group along with ITBP personnel standing anxiously waiting for us when they saw us they were happy and started descending we offered our blessings to them and crossed the border and we could see the beaming faces of our and porters and pony keepers. These natives earn some money during the yatra season as they have take one group and then bring back them they can at the maximum cater to only 8 groups , so when you travel if possible please help them by engaging both pony and porter though not fully needed, in the overall cost this will be a miniscule portion only.

Darshan of OM Parvat during return journey

During the onward journey as we traveled from Nabidang to Lipu leh in the night we could not fully see the surrounding while ascending, but now we could clearly see the environment and greatly enjoyed the snow covered peaks and the Lipu Nala which later becomes the mighty Kali River was flowing gently and there was a single trek lane near to that. After a brief halt we started our descent. As a thanks giving gesture Mr Dhanuskodi decided that he will not use the pony for the descent and accordingly he walked the whole way on the return journey , but he paid the contracted amount to the ponykeeper Thus our batch had many sterling devotees and really the author was happy to have did the yatra with them . We collected the incense herbs and easily reached Nabidang by lunch time.
Quite flowing Kali river in the upper reaches
On the return journey we don’t camp at Nabidang but straight away reach Kalapani. As it is a descent and the altitude decreases the trek is not that much difficult. We had our lunch at Nabidang, collected our film rolls and other items we deposited at the Nabidang camp. Now also we got the full darshan of the OM Parvat again, sang the OM Mangalam song in front of the natural wonder and started our journey enjoying the innumerable confluences of rivers reached Kalapani camp. Every thing seemed greener and bright now the hymn of Appar "KandEn avar ThiruppAtham kaNDaRiyaathana kaNDEn "( I saw His Holy feet and I found everything even the one I havenot seen so far ) only came to our mind. The whole world is the beautiful creation of the Lord who sustains this by His grace but at the same time He annihilates unwanted things and also gives His blessings to all who surrender at His Lotus feet.

Thanks giving Bhajan at Kalapani temple

On the way we witnessed a lot of snow covered peaks including the Nagini and Nag parvats named so as they resemble a snake rising its hood on both the sides of Lipu Nala. After reaching Kalapani we completed our immigration formalities. We had a nice bhajan at the Kalapani temple and everybody danced merrily thanking the Lord Shiva and Mother Kali, the joy in the eyes of everyone was palpable and it was a dance of thanks giving. ITBP personnel hosted a dinner in our honor and also presented a memorabilia, we also thanked them profusely for providing security and all help and gave a small gift to them in return as a show of our gratitude. If we had planned correctly we could have carried some sporting material from Delhi but some how we missed out on this part. If you take up the trip you can ask your group to take some sports item and also some pooja items for the temples at Gunji and Kalapani. Mr Goswami offered half of the Dakshina collected in the hundi of this temple.
The 21st day was the day of thanks giving to Shiva-Sakthi.


* * * * * * *

22nd day trek from Kalapani to Gunji


ITBP Personnel sharing their ration with Yatris ( Thanks to them)

We started leisurely from Kalapani again witnessed Vyasa’s cave, trekked leisurely as this was a descent and the trek was much easier than the ascent enjoyed the AdiSeshan(Nag) and Nagini peaks and ate the berries of rose wood and enjoyed the picturesque scene on the Nepal side, clicked photos with ITBP personnel and reached Gunji comfortably by lunch time , ITBP hosted us a grand lunch here and we all got back our medical reports and thanked those doctors for their concern. In the night again we had a nice bhajan at the Gunji temple along with ITBP personnel and thanked the King and Queen of the Universe for having selected us for setting foot in their holy land and also blessing us with a good darshan. Remaining half of the collection was deposited in the hundi of this temple. We also gifted some items like Chinese shawls to ITBP personnel.


Sunday, December 07, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய தரிசனம்) -26



இந்தியா திரும்பினோம்

21 ம் நாள் லிபு கணவாயிலிருந்து காலாபானி 18 கி.மீ நடை பயணம்

இந்தியா திரும்பி வரும்போது
லிபு கணவாயில் காத்திருக்கின்றோம்


மலையரசன் பொற்பாவை சமேத திருக்கயிலை நாதரின் மாப்பெருங்கருணையினால் அவர்களின் தரிசனம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட 33 யாத்ரிகளும் அம்மையப்பரின் அற்புத தரிசனம் பெற்று, அவர்களை வலம் வந்து வணங்கி , பெறற்கரிய பேற்றுடன் மானசரோவரில் நீராடி, பிறந்த பிறப்பின் பலனை அடைந்து சீனப்பகுதியில் இருந்து பேருந்தின் மூலமாக லிபு லே கணவாய் வந்து சேர்ந்தோம். வருகின்ற இறுதி(16)குழுவினர் வர சிறிது கால தாமதமானதால் சிறிது நேரம் வெயில் காய்ந்த லிபு கணவாயில் ஒய்வு எடுத்து சிவசக்திக்கு நன்றி செலுத்தினோம்.


பாட்டான நல்ல தொடையாய் போற்றி


பரிசரியாமை நின்றாய் போற்றி


சூட்டான திங்கள் முடியாய் போற்றி


தூமாலை மத்த மணிந்தாய் போற்றி


ஆட்டான நஞ்சு ண்டமர்ந்தாய் போற்றி


அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி


காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றி





செல்லும் போது கருக்கலில் சென்றதால் பாதையை சரியாக கவனிக்கவில்லை, இரண்டு கி, மீ செங்குத்தான இறக்கம், அதற்குப்பின் பாதை சமமாக செல்கின்றது லிபு கால்வாய் ஆற்றின் ஓரமாக. வழியெங்கும் பனி விழுந்திருந்தது, வழியில் வாசனை செடிகளை பறித்துக் கொண்டோம். திரும்பிவரும் போது நாபிதாங்கில் மதிய உணவு உண்டோம், நாங்கள் ஒப்படைத்த பிலிம் சுருள்களை திரும்ப வாங்கிக் கொண்டோம்.

திரும்பிவரும் போது கிடைத்த ஓம் பர்வத தரிசனம்

ஓம் பர்வதத்தின் தரிசனம் இப்போதும் கிடைத்தது. வரும் போது நாபிதாங்கில் தங்கவில்லை நேராக காலாபானி வந்து விட்டோம். மேலே ஏறும் போது உடல் உயர் மட்டத்திற்க்கு தயாராக வேண்டும் என்பதால் லிபு கணவாயை காலை 9 .00 மணிக்குள் கடக்க வேண்டும் என்பதாலும் நபிதாங்கில் தங்குகின்றோம்.

காலாபானி வரும் வழியில் நேபாள பகுதியில் பல பனி மூடிய சிகரங்களையும், இந்தியப்பகுதியில் ஆதிசேஷன் மற்றும் நாகினி சிகரங்களையும், பல் வேறு நதிகளின் சங்கமங்களையும் கண்டோம். நதியானது முதலில் சிறிய ஓடை போல இருந்தது பல் வேறு ஆறுகள் தங்கள் தண்ரைக் கொண்டு வந்து சேர்ப்பதால் சிறிது சிறிதால அகலமாகி, வேகமும் அதிகமாகி விசுபரூபம் எடுக்கும் அழகைக் கண்டோம்.
வழியெங்கும் நீர் வீழ்ச்சிகள்

இப்போது பார்ப்பவை எல்லாம் அதிக சுந்தரமாக தோன்றியது. அப்பர் பாடிய "கண்டேனவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்" என்பதற்கான விளக்கம் இப்போது தான் புரிந்தது. அம்மையப்பரை தரிசனம் செய்த உற்சாகமும், இறக்கம் என்பதாலும் இறங்கும் போது அதிக சிரமம் தெரியவில்லை.

காலாபானி முகாமும் நாக பர்வதமும்

காலாபானி அடைந்து பாஸ்போர்ட்டில் நாட்டிற்குள் உள்ளே வரும் முத்திரை பெற்றோம்( immigration formalities). பின் இரவு காளி கோவிலில் அருமையான யாத்திரையை கொடுத்த அம்மைக்கும் அப்பருக்கும் பஜனை .

காலாபானி காளி கோவிலில் நன்றி கூற பஜனை
நல்ல தரிசனம் கிடைத்ததின் ஆனந்தத்தை அன்று அனைவரும் வெளிப்படுத்தினர், பின் இரவில் ITBPயினர் விருந்து வழங்கினர், யாத்திரையின் நினைவுச் சின்னமும் வழங்கினர். எங்கள் குழுவினரும் அவர்களுக்கு எங்கள் அன்பின் அடையாளமாக சிறு பரிசுகள் வழங்கினோம்.

இந்த 21ம் நாள் காலாபானியில் சிவசக்திக்கு நன்றி செலுத்திய நாள்.

* * * * * * * *


22ம் நாள் காலாபானியிலிருந்து கூஞ்சி வரை நடைப்பயணம்

அதிகார வினைக ளறுப்பாய் போற்றி


ஆல நிழற்கீ ழமர்ந்தாய் போற்றி


சதுரா சதுரக் குழையாய் போற்றி


சாம்பர் மெய்பூசுந் தலைவா போற்றி


எதிரா வுலக மமைப்பாய் போற்றி


யென்று மீளாவருள் செய்வாய் போற்றி


கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றி (23)


கூஞ்சிக் கோவில்



சென்ற வழியிலேயே வியாசரின் குகையையும், பைன் மரங்களையும், வெள்ளை மலர்களும், சிவப்பு பழங்களும் கொண்ட உட் ரோஸ் புதர்களையும், எதிர் பக்கத்தில் நேர்த்தியாக நெடிதுயர்ந்து ஒரே வரிசையாக ஒட்டடை குச்சி போல வளர்ந்து அற்புத காட்சி அளித்த நேபாள மலைத்தொடர்களை ரசித்தோம். சிற்றுண்டி வழங்க காத்திருந்த ITBP வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இவ்வாறு இயற்கை அழகை அனுபவித்துக் கொண்டே
கூஞ்சி வந்து சேர்ந்தோம்.



திரும்பி வரும் போது ஆனந்தத்தாலோ அல்லது முற்றிலும் இறங்கு முகம் என்பதாலோ பயணம் அதிக சிரமமாக தெரியவில்லை. இறைவனுக்கு நன்றி செலுத்தம் விதமாக திரு தனுஷ்கோடி அவர்கள் அவரது குதிரைக்காரர் வந்திருந்தும் கூட குதிரையில் ஏறவில்லை நடந்தே வந்தார். கூஞ்சியிலும் ITBPயினர் மதியம் விருந்து வழங்கினர்.அன்று இரவு கூஞ்சி கோவிலிலும் அருமையான பஜனை.