Saturday, November 12, 2011

திருக்கயிலாய யாத்திரை 2011 -12

திருச்சிற்றம்பலம்


சென்னையை சேர்ந்த திரு. இரவி அவர்கள் நேபாள் மூலமாக மேற்கொண்ட திருக்கயிலாய யாத்திரையின் நிறைவுப்பதிவு இது. முதலில் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் அவருடைய புகைப்படங்களை பயன்படுத்திக்கொள்வதற்கு அனுமதி தந்தமைகாக.

பிரயாணம் சுகமாக இருந்தாலும் இவர்கள் கிரி வலத்தை முழுவதுமாக செய்ய அனுமதி கிட்டவில்லை, அநேகமாக நேபாள் வழியாக செல்லும் அநேகர் அங்கிருக்கும் யாத்திரை அமைப்பாளர்கள் இவ்வாறு செய்கின்றனர் மற்றும் குதிரைக்காரர்களுடனும் அநேகமாக பிரச்னைகள் உள்ளன என்றே கூறுகின்றனர். மேலும் இவர்கள் முக்திநாத்திலிருந்து திரும்பி வரும் போது விமானத்திற்கு கட்டணம் வாங்கினர் ஆனால் பேருந்து மூலமாக வரவேண்டி இருந்தது என்று கூறினார்.

அடியேனது திருக்கயிலாய யாத்திரை புத்தகத்தை பிரசுரம் செய்த நாள் முதல் மலையரசன் பொற்பாவையயும் திருக்கயிலை நாதரரையும் தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர் மனதில் தோன்றியது. அவனருளால் இந்த வருடம் அந்த ஆசை நிறைவேறியது.


போக்ரா ஹோட்டலில் திரு. இரவி அவர்கள்

திரு.இரமணி அவர்கள்

முக்திநாத் செல்லும் சிறு விமானம்

As the weather was inclement they returned by bus from Phokora.


விந்தயாவாசினி கோவில், காத்மாண்டு







புத்த விகாரம் காத்மாண்டு













அடுத்த நாள் 24-05-2011 அன்று அவர் விமானம் மூலம் காத்மாண்டிலிருந்து டெல்லிவந்து பின்னர் சென்னை வந்து சேர்ந்து சிவசக்திக்கு நன்றியுடன் தனது திருக்கயிலாய யாத்திரையை வெற்றிகரமாக அவனருளால் பூர்த்தி செய்தார்.

இப்பதிவுடன் இந்த யாத்திரை தொடர் நிறைவுற்றாலும் , இனி யாதவது ஒரு அன்பரின் புகைப்படங்கள் கிடைக்கும் போது பின்னும் இத்தொடர் தொடரும். அதுவரை காத்திருங்கள் அன்பர்களே.

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

3 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

200ம் பதிவுக்கு வாழ்த்துக்கள் கைலாஷி சார். படங்கள் அருமை.

S.Muruganandam said...

மிக்க நன்றி மௌலி ஐயா.

S.Muruganandam said...

அருமையாக கவிதை எழுதுகின்றீர்கள் ரிஷ்வன் அடிக்கடி இந்தப் பக்கம் வருகின்றேன்.

மிக்க நன்றி ரிஷ்வன்