Saturday, August 31, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -42 (திருக்கயிலாய யாத்திரை-2012)

டார்ச்சனிலிருந்து திருமுடி தரிசனம் 





 திருமுடியின் அருகாமை காட்சிகள்

முக்கண்ணனின் அற்புத தரிசனம்




ஹர்ஷித் ஹிமான்சு சீன வழி காட்டி

விஷ்ணு மூர்த்தி





சென்ற  தடவை பார்த்ததற்கு மிகவும் விரிவடைந்துவிட்டது. பல நவீன கட்டிடங்கள் உள்ளன. தக்லகோட்டிலிருந்து தற்போது ஒரு தார் சாலை டார்ச்சனை இணைக்கின்றது. மிகவும் அதிக அளவில் தங்கும் விடுதிகள் உள்ளன. அதிக அளவில் திருக்கயிலை வாசரை தரிசனம் செய்ய அன்பர்கள் வருகின்றனர் என்பதற்கு இதை விட இன்னும் என்ன சான்று தேவை. ஆயினும் இன்னும் பாதைகளில்  பச்சை நிறத்தில்   Snooker டேபிள்கள் கிடக்கின்றன. டார்ச்சன் ஒரு தூங்குமூஞ்சி நகரம் போலவே இன்னும்  காட்சி அளிக்கின்றது. 

திரு.சுதார் அவர்கள் ஒரு விஷ்ணு சிலை கொண்டு வந்திருந்தார். அதை ஒரு புத்த விகாரத்தில் ஸ்தாபிதம் செய்தோம். பிரம்மா மானசரோவர், திருக்கயிலாயம், நடுவில் டார்ச்சனில் விஷ்ணு மூர்த்தி அருள் பாலித்தால் மும்மூர்த்திகளையும் வணங்கியது போலாகும் என்பது அவரது நம்பிக்கை. பின்னர் மதிய உணவை அங்கேயே முடித்துக் கொண்டு நேராக இன்றே சாகா சென்று விடலாம் என்று புறப்பட்டோம். தங்குமிடம் எதுவும் சரியாக அமையாததால் எவ்வளவு குறைவு காலம் சீனப்பகுதியில் தங்க முடியுமோ அவ்வளவு நல்லது என்று இந்த முடிவெடுத்தோம், சிரேஷ்டாவினரும் ஒரு நாள் காத்மாண்டுவில் தங்கிக் கொள்ள சம்மதம் தந்தனர். எனவே தார்  சாலையில் வழுக்கிக்கொண்டு அன்றே சாகா அடைந்தோம் அந்த காட்சிகளை மறு பதிவில் காணலாமா அன்பர்களே. 
  

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

பிரம்மா மானசரோவர், திருக்கயிலாயம், நடுவில் டார்ச்சனில் விஷ்ணு மூர்த்தி அருள் பாலித்தால் மும்மூர்த்திகளையும் வணங்கியது போலாகும் என்பது அவரது நம்பிக்கை.

அருமையான பகிர்வுகள்..!

S.Muruganandam said...

மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி