Thursday, July 11, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -38 (திருக்கயிலாய யாத்திரை-2012)

கௌரி குளம்

டோல்மாவிலிருந்து  கீழிறங்கி செல்லும் பாதை முழுவதும்
தூய வெண்  பனியால் நிறைந்திருந்தது

கௌரி குளத்தை நெருங்கிறோம்



கௌரி குளம் அருகில் உள்ள சிறு குளம் 
இந்தத் தடவை கிடைத்த காட்சி

சென்ற யாத்திரையின் போது கிடைத்த காட்சி

( ஐயனின் பவள மேனியில்  பால் வெண்ணீறு  திகழ்வது போல இங்கே பாறைகள் எல்லாம் பனியால் மூடப்பட்டு சமவெளி போல  தெரிந்த இடம் எவ்வாறு  உள்ளது பாருங்கள்)

முழுவதும் உறைந்த கௌரி குளம்


 பச்சை  பசுங்கொடி   பார்வதி நீராடும்
 கௌரி குளம் மரகத வர்ணத்தில்  
சென்ற யாத்திரையின் போது இப்படி தரிசித்தோம்.

இன்ற யாத்திரையில் இப்படி தரிசித்தோம்

இப்படியும்  சில சமயம் தரிசனம் கிட்டும்


கௌரி குளத்தின் கரையில் 
அனில்-உமா கோயல் தம்பதியினர்

கௌரி அன்னையை வழிபடும் உமா கோயல்

டோல்மா கணவாயில் இருந்து செங்குத்தான  இறக்கத்தில் அமைந்துள்ளது கௌரி குளம் பனியில்லாத போது யாரும் அதன் அருகில் செல்வது மிகவும் கடினம் ஏனென்றால் மேலிருந்து பாறைகள் விழும் வாய்ப்புகள் அதிகம்.  ஆகவே யாரும் கௌரி குளத்திற்கு செல்வதில்லை. ஐயனின் பவள மேனியில் பால் வெண்ணீறு திகழ்வது போல,     இப்போது மலை முழுவதும் தூய வெண் பனி நிறைந்திருப்பதால் அன்னையின் குளத்திற்கு அருகில் செல்லும் வாய்ப்பு கிட்டியது. 


 கௌரி குளத்தில் இருந்து பனி படர்ந்த மலைப் பாதையில் இறக்கம்



அடியேனும் போர்ட்டர் சிறுவனும்






கீழே விழுந்த போது இந்த  போர்ட்டர் ரூபத்தில்தான்  தோடுடைய செவியன்  சிவ பெருமான் விடையேறி வந்து  காப்பாற்றினார்)

லாம் சூ சமவெளியை அடைந்து விட்டோம்

 மலைகளில் எத்தனை முகங்கள் 

லாம் சூவிலும் பனி தொடர்கின்றது

மலை முழுவதும் பனி  நிறைந்திருந்தால் எப்படி முதலில் இறங்குபவர்கள் இறங்கினார்களோ அதே வழியில் இறங்கினோம். சிறிது நேரம் சென்றபின் கண்ணில் கண்ட காட்சி அருமையாக இருந்தது. எதிரே கௌரி குளம் முழுதும் உறைந்து காட்சி அளித்தது. பாதை சரியாக இருக்கும் போது கௌரி குளத்தை நெருங்குவது மிகவும் கடினம், மேலிருந்து அப்படியே தரிசனம் செய்து விட்டு அப்படியே இறங்கி விடுவோம். பனி இவ்வளவு நிறைந்தருந்ததால்  இன்றைய தினம் அன்னை தானே  தங்களை கௌரி குளத்திற்கு அருகில் அழைத்து அருமையான தரிசனம் கொடுத்தாள். கௌரி குளத்தை மரகதக்குளமாக முன்னர் பார்த்திருந்தேன் இந்தத்தடவை அந்த அர்த்த சந்திர வடிவத்தை தூய வெள்ளை கௌரி குளத்தைப் பார்க்கும் பாக்கியம் அன்னை மலைமகள் அருளால் கிட்டியது.

லலிதா சகஸ்ர நாமத்தில் வரும் ஒரு நாமம் – அஷ்டமீ சந்த்ர- விப்ராஜ- தலிக-ஸ்தல சோபிதா, அரை வட்ட வடிவான அ|ஷ்டமி சந்திரனைப் போல் விளங்கும் நெற்றியுடையவள்; அந்த    நாமம் மனதில் பளிச்சிட்டது. அம்பாளை பஞ்சமி, பைரவி, பர்வத புத்ரியை, பஞ்ச நல் பாணியளை கொஞ்சிடும் குமரனை, குணமிகு வேழனை கொடுத்த நல் குமரியளை அவளது கருணைக்காக வணங்கி கீழே இறங்குவதை தொடர்ந்தோம்.

மேலே ஏறுவதை விட கீழே இறங்குவது மிகவும் கடினமானதாக இருந்தது. பனியின் காரணமாக பாதை வழுக்கலாக இருந்ததால் பலர் வழுக்கி விழுந்தனர். பாறைகளைப் பார்த்து பாதங்களை குறுக்காக வைத்து பார்த்து பார்த்து இறங்க வேண்டி வந்தது. அடியேனுடைய போர்ட்டர் சிறுவன் பாறைகளை தன் ஊன்று கோலினால் காண்பித்துக் கொண்டு கையைப் பிடித்துக் கொண்டு முன்னே செல்ல அடியேன்  எனது ஊன்று கோலை பார்த்து ஊன்றி மெதுவாக இறங்கினேன். அப்படியும் பல முறை கீழே விழுந்து எழுந்தேன். “தீ மேல் இடினும் ஜெய சக்தியென திடமாய் அடியேன் மொழியும் திறமும் அருள்வாய்” லலிதாம்பிகையே என்னும் லலிதா நவரத்ன பாடல் வரிகளை மனதில் ஜபித்துக்கொண்டு கீழிறங்கும் போது ஐயன் தனது திருவிளையாடலைக் காட்டி அருளினார்.  ஓர் இடத்தில் அடியேன் வழுக்கி விழுந்து என்னுடைய போர்ட்டர் சிறுவனையும் இழுத்துக் கொண்டு அம்மா! அங்காள பரமேஸ்வரி! என்று உருண்டு விழும் சமயம், திபெத்திய போர்ட்டர் போல உருமாறி அடியேனை கையைப்பிடித்து தடுத்து நிறுத்தி மேலே தூக்கி விட்டு அந்த கறை கண்டன், கறை படிந்த பற்களால் அடியேனை பார்த்து சிரித்தார். அடியேன் பாராயணம் செய்யும் ருத்ரத்தின் முழு அர்த்தம் அந்த கணத்தில் விளங்கியது. அனைத்து ஜீவராசிகளிலும் ஜீவனாகவும், ஈஸ்வரனாகவும் விளங்குபவர் அந்த சிவபெருமானே, நாம் நம்முடைய ஆணவம், கன்மம், மாயை என்னும் மலங்களை விட்டால் இந்த சீவனும் சிவனாகலாம். ஐயா நீயே சரணம் என்று அனைத்தையும் அவரது திருப்பாதங்களில் சமர்ப்பணம் செய்து விட நாம் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை, இதைத் தானே அப்பர் பெருமானும் "கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்" என்று பாடிப்பரவினார்.  பின்னர் மெதுவாக கீழிறங்கி லாம் சூ சமவெளியை அடைந்தோம்.

இவ்வாறு இன்றைய தினத்தின் மலையேற்றத்தையும் இறக்கத்தையும் சிவசக்தி  அருளால் முடித்தோம். இன்னும் நடக்க வேண்டிய தூரம்  உள்ளது அந்த  அனுபவமும் அப்போது கிடைத்த ஒரு அற்புத தரிசனமும் அடுத்த பதிவில் காணாலாமா அன்பர்களே.


Wednesday, July 10, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -37 (திருக்கயிலாய யாத்திரை-2012)

 டோல்மாவில் பார்வதி அம்பாள் தரிசனம்


 பனி நிறைந்த பிரார்த்தனைக் கொடிகள்


அன்னை பார்வதியின் அந்தப்புரம்
 இந்த டோல்மா கணவாய்

 யாத்திரையின் மிகவும் உயரமான இடம்
 என்பதால் இவ்வளவு பனி  

அன்னையின் திரு முன்
 திரு.முகர்ஜி அவர்கள்

அன்னையை வணங்கும் ஒரு வெளிநாட்டு குழுவினர்



கௌரியன்னைக்கு பூஜை செய்யும் பக்தர்கள் 


 அம்பாளின் திருமுன்
 சுதார், அமீத் அஹர்வால்

பார்வதியின் பாதம் போற்றும் 
போர்ட்டர் சிறுவன், அடியேன், ஹிமான்சு, சுதார், சுஜய் ஹஜ்ரா, அமீத்

நாங்கள் பணி புரியும் நிறுவனக் கொடி....

அன்னைக்கு சமர்ப்பணம்


  அம்பிகையின் முன்னர் 
தந்தையும் (சுதார்) தனயனும் (ஹிமான்சு)

 சிவசக்தியின் மாப்பெருங்கருணையினால் வெற்றிகரமாக, மகிழ்ச்சிகரமா
 எந்த இடர்ப்பாடும் இல்லாமல் பனி நிறைந்த காலத்தில் முடித்ததை 
பகிர்ந்து கொள்ளும் அமீத் அஹர்வால்

சென்ற தடவை சென்ற போது எங்கள் குழுவினர் மட்டுமே அன்றைய தினம் கிரி வலம் செய்தோம். இன்றோ எத்தனை குழுக்கள் என்பது தெரியவில்லை. ஆயினும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் இருப்பர். கிரி வலத்திற்கு இப்போதுதான் அனுமதி கிடைத்தது என்பதாலும்,முதல் நாள் சாகா தாவா பண்டிகை என்பதால் அதைப் பார்க்க வந்த பக்தர்களாகவும் இருக்கலாம் ஆயினும் கூட்டம் அதிகமாவே இருந்தது. மலையேற்றப் பாதையில் ஒருவர் பின் ஒருவராக இராணுவ வீரர்கள் போல பக்தர்கள் மலை ஏறிக்கொண்டிருந்தனர்.

எங்கள் குழுவில் சிலர் இன்றைய தினம் குதிரையில் செல்ல விரும்பினர். டோல்மா வரைக்கும் 300  யுவான்களுக்கு அவர்களுக்கு குதிரை கிடைத்தது. குதிரைக் காரர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரே நாளில் இரண்டு மூன்று தடவை மேலும் கீழும் செல்ல முடியும் என்பதால்  சிறு தூரம் செல்லவே விரும்பினர். முதல் நாள் பெய்த பனி உருகி உருகாத பனியில் சிறு சிறு அடியிட்டு மிகவும் மெதுவாக ஏறினோம். செங்குத்தான ஏற்றம், வழுக்கும் பாதை , பக்தர்களும் அதிகம் ஆகவே மெதுவாகவே மலை ஏற முடிந்தது. ஐந்தெழுத்து மந்திரத்தையும் அன்னையின் மந்திரத்தையும் மனதில் ஜபித்துக் கொண்டே சுமார் மூன்று மணி நேரம் மலையேறி டோல்மா கண்வாயை அடைந்தோம்.

அங்கு அதிக நேரம் இருக்க முடியாத சீதோக்ஷண நிலை என்பதால் அன்னையை சகல செல்வங்களும் தரும் இமயகிரி ராஜ தனயையை அலையாழி அரிதுயிலு மாயனது தங்கையை, குமார கண நாதாம்பிகையை அபிராமி அந்தாதி பாடி வணங்கி   உடனே கீழே இறங்கினோம். இன்றைய தினம் சுமார் ஆயிரம் சிவ பக்தர்கள் கிரி வலம் செய்திருப்பார்கள் என்று தோன்றியது இத்தனை பக்தர்களைப் பார்த்த போது அடியேன் மனதில் தோன்றிய எண்ணம் இதுதான். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு Faith moves the mountains அதாவது தன்னம்பிக்கை இருந்தால் மலையும் நகரும். ஆனால் இங்கோ ஆட்டிவித்தால் யாரொருவர் ஆடாதாரே என்று அப்பர் பெருமான் பாடிய சிவபெருமான் மலை ரூபத்தில் தனது பக்தர்களை நகர்த்திக்கொண்டிருந்தார். Here a mountain is moving His faithful.

Kailash Manasarovar Yatra -2012 - 36

Second Day's Parikrama in 

Snow clad Dolma 

 Darshan of the Lord  
before the  steep climb to Dolma pass 

 We set out very early
even the moon has not set so far  

The  beautiful view of  dawn at Deraphuk

 Sun's rays were  illuminating the snow covered  peaks


Yatris waiting for Pony 


Rashmi  Mahajan

Commencement of  second day's Parikrama in the snow covered hills 

Like soldier's queuing one behind other
( As this was the beginning of the season there was a heavy crowd of faithfuls)

The  midway trek 
 the yatris  walked in snow


Silver coated  eastern extension



Earlier year's view of eastern extension 


A snow draped  peak 

                                                                   Amit Agrawal and Suthar


Amit  and Murugan

 Nishta Pandey  warming her up with 
  hot water on the coldest day

 A rest is a must before reaching Dolma

Nearing Dolma  pass 

 Aha...   Dolma is in sight


 The trek route we traversed
(View form Dolma)


On the ninth day of the yatra and the second day of the parikrama we trekked for about 22 Kms. First it is a steep climb to Dolma pass the tallest point on the whole yatra  and equally steep descent to Lamchu valley and then the trek up to  Zangzerbu.  This day's trek is supposed to be  the toughest  as it involves the climbing upto Dolma. The weather at Dolma is very fickle and it is always risky. The popular belief is that only when Dolma the Tibetan Goddess ( For Hindus it is Maa Parvati)  wills only,  one will be able to cross  the pass. This year as we  undertook the  travelled in the beginning of the season  the snow has not completely melted in the higher reaches  this compounded the problem. But by the grace of Shiv-Sakthi all the yatris in our group  who attempted completed the parikrama successfully. 

As it is better to cross Dolma before noon we started early, the dawn was beautiful at Deraphuk.  As  Lord  was  draped with snow we could not get his full darshan in the morning , nevertheless we prayed to Him to  be with us in this arduous trek and commenced our trek. It was sheer white everywhere and every nook and corner was filled with snow.  We were providesd with lunch packets like the  previous  day we also carries our  snacks and hot water. Some of us opted for pony upto  Dolma luckily we got the same. Normally the Pony is booked for the whole three day's parikrama. 

As it was the beginning of the season and the Chinese had allowed trek to Dolma just few days  before it was crowded so we climbed the difficult trek one after another slowly and steadily, as we were ascending  the snow thickness was also  increasing.    Undeterred chanting the  Holy five  syllables we climbed the mountain. In between we could see the wonderful snow clad eastern extension. Shiv-sthal and karma testing stone were fully immersed in snow.   Seeing so many people walking along helped us to. It took about three hours to climb to Dolma and at last we reached Dolma with great joy.