Saturday, April 11, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 22

மூன்றாம் நாள் கிரி வலம் 
திருக்கயிலாய கிரி வலம் நிறைவு 

ஜுடுல்புக்கில் இளங்கோவன் ஐயா குதிரைச் சிறுவனுடன்

மூன்று நாளும் இந்தச் சிறுவன்தான் குதிரையை நடத்திக்கொண்டே கிரி வலம் வந்தான்.

கிரிவலப்பாதை

அதிகாலையிலேயே ஜுடுல்புக்கில் இருந்து புறப்பட்டோம். மூன்று நாட்களில் இன்றைய தின கிரி வலம்தான் மிகவும் எளிதானது. மேலும்    நான்காவது வணங்கிடமான  ஜாங்டோ(Zangdo) வரையே  நடை பயணம் அவசியம். அதற்குப்பின் வண்டியில் செல்லலாம் என்பதால் இன்னும் எளிதாகி விட்டது. தற்போது வண்டிகள் செல்லும் விதமாக இரட்டைப் பாதை ஆகிவிட்டது.   அதிகமாக ஏற்ற இறக்கம் இல்லாத இந்த பாதை  ஜாங் சூ ஆற்றை ஒட்டியே அமைந்துள்ளது. வழியில் எந்த வித சிரமமும் இல்லாமல் கிரி வலத்தை நிறைவு செய்தோம்.

சின்னஞ்சிறார்களும் கிரிவலம் செய்கின்றனர் 

சீன குதிரை ஆண்டு என்பதால் திபெத்தியர்கல் இந்த வருடம் மிகவும் அதிகமாகவே இருந்தனர். குடும்பம் குடும்பமாக லிரி வலம் செய்தனர். பலர் தங்களுடைய  சிறு   உறங்கும் கூடாரத்தில் (Sleeping tent)  இரவு படுத்து உறங்கிவிட்டு கிரி வலத்தை மறு நாள் தொடர்ந்தனர்.    ஒரு சிலர் அப்படியே பனி படர்ந்த தரையில் படுத்து உறங்கி விட்டு காலையில் கிரி வலம் துவங்கியதைப் பார்த்தபோது இவர்களைப் பார்த்து  ஆச்சிரியப்படாமலிருக்கவில்லை.



கிரி வலப்பாதையில்  பல இடங்களில் இது போல  மில்ரெபாவின் காலடித்தடம் கொண்ட    புனித இடங்களைப் பார்க்க முடிந்தது. அவியெல்லாம் பல வர்ண பிரார்த்தணை கொடிகளால் நிறைந்திருந்தன.   ஆனால் பெயர்ப்பலை சீன மற்றும் திபெத்திய மொழியில் இருப்பதால் சரியாக தெரியவில்லை.  கூட்டம் அதிகமானதால் குப்பையும் அதிகமால கிடந்தது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான கேன்கள், சிப்ஸ் பாக்கட் உறைகல் என்று எங்கு நோக்கினும் குப்பை நிறைந்து கிடந்தது. ஐயா உனக்கு அப்பர் பெருமான் செய்தது போல உழவாரப்பணி யார் செய்வார்கள். யாருடைய மனதிலாவது அந்த கருத்தை ஏற்படுத்து என்று வேண்டிக்கொண்டே கிரி வலத்தை தொடர்ந்தோம்.    




"ஓம் மணி பத்மே ஹம்" என்ற வாசகங்கள் செதுக்கப்பட்ட மணி கற்கள் இந்தத் தடவை அதிகமாகவே கண்ணில் பட்டது.  ஒரு கல் தச்சர் அங்கேயே அமர்ந்து செதுக்கிக்கொண்டிருந்தார். பலர் அதை விலைக்கு வாங்கி  சமர்பித்துவிட்டு செல்வதையும் கண்டோம்.  

மணிகற்களின் அருகே அடியேன், குமாரசாமி ஐயா

நடுவே பல வண்ண மண் கொண்ட பகுதி

இவ்விடம்  டாகினிகள்  நாட்டியமாடும்  அரங்கம்  ( Dakini Dancing Ground) என்று அழைக்கப்படுகின்றது.  இங்கு மண் சிவப்பாக இருப்பதற்கான காரணம்  ஜேசர் என்னும் திபெத்திய அரசர்  ட்ராங் என்னும்  வன யாக்கை இங்கு கொன்றதால தன் இரத்தத்தினால் மண் சிவப்பாகியது என்று நம்பப்படுகின்றது. மேலும் பட்டை, கறுப்பு மண்களையும் இப்பகுதியில் காணலாம். சில பக்தர்கள் இந்த பல வண்ண மண்ணை தங்கள் இல்லம் எடுத்து செல்கின்றனர்.  



ஆற்றின் மறு கரையில்  புதுப் பாதை அமைக்கப்பட்டு வருகின்றது அதில் வண்டிகள் எளிதாக செல்ல முடியும். ஜாங் சூ ஆற்றின் இடையேயும் ஒரு பாலம் கட்டப்பட்டு வருகின்றது. இப்பகுதியிலும் மீட்பு வண்டி, மருத்துவ வண்டி ரோந்து வந்து கொண்டிருக்கின்றது. 



குர்லா மாந்தாதா மலைச்சிகரங்கள்  இராக்ஷஸ்தால் ஏரி

இன்றைய கிரிவலத்தின் போது குர்லா மாந்தா மலைச்சிகரங்கள், இராக்ஷஸ் தால் ஏரி மற்றும் பார்க்கா சமவெளியின் அருமையான காட்சிகளை பறவைப் பார்வையாக பார்க்கும் வாய்ப்பு கிட்டுகின்றது. 

எங்களுக்காக காத்துக்கொண்டு நின்ற பைரவர்

ஐயனின் கருணையை என்னவென்று சொல்ல பைரவரின் வாகனத்தையே மூன்று நாட்களும்   எங்களுக்கு துணையாக அனுப்பிவைத்தார். பைரவரே எங்களுக்கு காவலாக வந்ததாக உணர்ந்தோம்.  முதல் நாள் கிரி வ்லத்தின் போது மேற்கு முகத்தின் அருகில் முதலில் கவனித்தோம், டேராபுக் முகாம் அடையும் சமயத்தில் கண்ணில் பட்டது. டோல்மா ஏறும் இரு முறை கண்ணில் பட்டது, டோல்மாவிலும் உடன் நின்றது, இன்றைய தினம் கண்ணில் படவில்லையே என்று நினைத்தோம். ஆனால் ஜாங்டோவில் நுழைந்த போது எங்களுக்காக காத்துக்கொண்து இருந்தது.  என்ன ஒரு அதிசயம் எங்கள் குழுவில் எழுவருக்கும் பல் வேறு சமயங்களில் காட்சி கிட்டியது. 


கிரி வலம் நிறைவு செய்த பின் ஜெகதீசன்,  அடியேன் 

இளங்கோவன், குமாரசாமி , அடியேன்

குதிரைக்காரர்களுடன் 


 இறைவன் அருள் பெற்ற எழுவர் 

 அவன் அருளால் தான் அவன் தாள் வணங்க முடியும்.    ஜெகதீசன், இளங்கோவன், குமாரசுவாமி, அடியேன், செந்தில், சேகர் -  ரேவதி  தம்பதியினர். ஆகிய எழுவர் அந்த சிவசக்தியின் அருளால் கிரி வலத்தை முழுமையாக நிறைவு செய்தோம்.  பின்னர் திபெத்திய நிறுவன பேருந்து மூலம் டார்ச்சன் அடைந்தோம்  அடுத்த பதிவில் டேராபுக்கில் இருந்து  திரும்பிச்சென்றவர்கள் பெற்ற தரிசனங்களைப் பார்ப்போம் அன்பர்களே. 

சாதிகுலம் பிறப்புஎன்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் 
ஆதம்இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு;
பேதைகுணம்; பிறர் உருவம் யான் எனதுஎன் உரை மாய்த்து
கோதுஇல் அமுது ஆனானை குலாவு தில்லை(கயிலை) கண்டேனே!

                                                                                                                                                   யாத்திரை தொடரும் . . . . . . 

3 comments:

ப.கந்தசாமி said...

அனைவரும் பாக்கியசாலிகள்.

S.Muruganandam said...

எல்லாம் அவன் செயல். ஆடுவித்தால் யாரொருவர் ஆடாதாரே.

S.Muruganandam said...

எல்லாம் அவன் செயல். ஆடுவித்தால் யாரொருவர் ஆடாதாரே.