Saturday, April 11, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 23

மூன்று முக தரிசனம் 


கிரிவலத்தை தொடரவேண்டாம் டார்ச்சன் திரும்பி விடலாம் என்று முடிவு செய்த அன்பர்கள் இரண்டாம் நாள் கிரி வலத்தின் போது பெற்ற தரிசனம் இப்பதிவில் இடம்பெறுகின்றன. 

டார்ச்சனுக்காக கிளம்புகின்றனர் 

குதிரைகள் தயாராகின்றன 

அதிகாலை சூரிய கால சமயத்தில் வாமதேவ முகத்தின் தரிசனம் 

இந்த வண்ண வண்ண கூடாரங்களில்தான் குதிரையோட்டிகள் இரவு தூங்குகின்றனர்.  





மஞ்சு ஸ்ரீ மலை

வ\டக்கு மற்றும்  மேற்கு முகம் இணைந்த காட்சி  



மேற்குமுக தரிசனம் 

 கிரிவலப்பாதையில் சுகந்தி அவர்கள் 







சுகூ புத்த விகாரம் 

தெற்கு முக தரிசனம் 

சென்ற போது மேகம் மறைத்ததால் தெற்கு முக தரிசனம் கிட்டவில்லை ஆனால் திரும்பி வரும் போது அம்முக தரிசனமும் அருமையாக கிட்டியது.  




யமதுவாரம் 

யமதுவாரமும்  பின் புலத்தில் திருக்கயிலாயமும் 

திரும்பி வரும் போது மிகவும் அவசரப்படுத்தினார்களாம் அதுவும் குதிரைக்காரர்கள் மிகவும் அவசரமாக வந்ததால் மூன்று பெண்கள் கீழே விழுந்து விட்டனராம். அதில் ஒருவருக்கு கழுத்தில் அடிபட்டு சிசிச்சை செய்யும்படி ஆகிவிட்டதாம். மருத்துவ வண்டி வந்து அதில் உள்ள மருத்துவர் மருந்து மாத்திரைகள் கொடுத்தாராம். அதற்கான கட்டணத்தையும் வசூலித்தனராம்.   பின்னர் அவர்கள் டார்ச்சன் அடைந்து கிரிவலம் சென்றவர்கள் வருவதற்காக காத்திருந்தனர். 

டார்ச்சன் சென்ற பின் ஒருவரின் உடல் நிலை மிகவும் மோஸமாகிவிடவே அவரை அழைத்துக்கொண்டு கீழே சென்றுவிட்டனர். இவ்வாறு தனியாக செல்லும் போது சில சமயம் சீன அரசு குழு விசாவே வழங்குகின்றது என்பதால் தனியாக செல்பவர்கள் எல்லையை கடக்க நேரிடும் போது அபராதம் செலுத்த வேண்டி வரும். ஆகவே இவ்வழியாக செல்லும் போது யாத்திரைக்கு முன்னரே உடலை உயர் மட்டத்திற்கு ஏற்றவாறு தயார் படுத்தி கொள்ளவேண்டும்.
 டார்ச்சனில் ஓய்வு


டார்ச்சனில் ஒய்வெடுத்தனர் மற்றும் சுற்றி வந்து ஐயனை பல முறை தரிசித்தனர் மற்றும் மணி மாலைகள் வாங்கினர். 

பிறவிதனை அறமாற்றி; பிணி மூப்புஎன்று இவை இரண்டும்
உறவினோதும் ஒழியச்சென்று; உலகு உடைய ஒரு முதலை
செறுபொழில் சூழ் தில்லைநகர்த் திருச்சிறம்பலம் மன்னி,
மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேனே! 


                                                                                                                                                            யாத்திரை தொடரும் . . . . . . 

Holy Yatra to the Abode of Lord Shiva - 22

Third Day's Kora

Successful completion of Kora 

 Mr. Elangovan with pony boy at Zhutulphuk camp

 This little boy handled the pony for the three days of the parikrama. 

Double width parikrama route

As we have to reach Dongpa that day we started early from Zhutulphuk. The path was almost plain and it was motorable mud path and third day's parikrama is the easiest one so nobody faced any problem enroute. The path follows Zong Chu river.  Ambulance and army recovery vehicles regularly patrol in the route now and many local Tibetans travel in two wheeler in the route. 


This tiny tot is also performing kora with her mother

As this was the Chinese year of Horse there were many local Tibetans, here you  see a child along with her mother. Some of them slept in the sleeping tents which they carry. Some slept in the open and continued the parikrama. They perform the kora easily as they habituated to this climate. 


A cairn decorated with flags

There are many holy placed all along the route with foot  prints and other sacred points  with cairns decorated with prayer flags. As the crowd was more littering also more this time, plastic water bottles, cool drink cans, snacks covers were strewn all along the parikrama route, it will need mammoth effort to clean this tonnes of garbage.  

The name boards are in the local languages only now may be in future they will add English also so that we can also appreciate .

Mani Stones 

At many placed we found the Mani stones also in which the Holy Mantra " OM Mani Padme Hum" is engraved. We found one sculptor engraving the  mantra on the stones, many Tibetans   bought the stone and submitted the same at these places.  

Muruganandam                                                       Kumarasamy 

Dakini Dancing ground 

At the last part of the trek  there is a flat area close to Zong Chu called Dakini Dancing Ground. Above the path is Transger Trangmar, aslope with golden and red sand, where KIng Gesar shot a drong, a wild Yak,the blood staines the golden sand red. There are also sands of other colors namely green and black, brown . many Pilgrims carry these clored sand to their homes. 


A new path under construction on the other side of river 

On the other side of the river a new path is being laid in which heavy vehicles can also ply. A bridge across the Zong Chu river is also under construction. Military rescue vehicle and Ambulance also patrol on the parikrama route. 



Enchanting panaromic view of Barkha plains

From  up above the  hills one gets the panaromic view of Gurla Mandata ranges and Rakshas Tal and the Baraka plains. 


 The dog waiting for us

The dog is the mount of Bairava, the fierce form of Lord Shiva. This dog accompanied us on all the three days during the parikrama. It was as if Lord SHiva has himself sent this dog to protect us. We all felt that the merciful Lord Shiva was protecting us all along teh parikrama.  

Zongdo ( 4th Prostration point)


Jagadeesan and Muruganandam

Elangovan, KUkaswamy and Muruganandam

Along with pony handlers. 


The Lucky seven  

 It is believed that any thing is possible by the grace of God only, so the seven could also complete the parikrama against the odds b the grace of Shiva sakthi. The seven yatris are Jagadeesan, Elangovan, Kumaraswamy, the author, Senthil, Sekar and Revathy couple.   Later they all reached Darchen by bus thus completing the parikrama. 

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 22

மூன்றாம் நாள் கிரி வலம் 
திருக்கயிலாய கிரி வலம் நிறைவு 

ஜுடுல்புக்கில் இளங்கோவன் ஐயா குதிரைச் சிறுவனுடன்

மூன்று நாளும் இந்தச் சிறுவன்தான் குதிரையை நடத்திக்கொண்டே கிரி வலம் வந்தான்.

கிரிவலப்பாதை

அதிகாலையிலேயே ஜுடுல்புக்கில் இருந்து புறப்பட்டோம். மூன்று நாட்களில் இன்றைய தின கிரி வலம்தான் மிகவும் எளிதானது. மேலும்    நான்காவது வணங்கிடமான  ஜாங்டோ(Zangdo) வரையே  நடை பயணம் அவசியம். அதற்குப்பின் வண்டியில் செல்லலாம் என்பதால் இன்னும் எளிதாகி விட்டது. தற்போது வண்டிகள் செல்லும் விதமாக இரட்டைப் பாதை ஆகிவிட்டது.   அதிகமாக ஏற்ற இறக்கம் இல்லாத இந்த பாதை  ஜாங் சூ ஆற்றை ஒட்டியே அமைந்துள்ளது. வழியில் எந்த வித சிரமமும் இல்லாமல் கிரி வலத்தை நிறைவு செய்தோம்.

சின்னஞ்சிறார்களும் கிரிவலம் செய்கின்றனர் 

சீன குதிரை ஆண்டு என்பதால் திபெத்தியர்கல் இந்த வருடம் மிகவும் அதிகமாகவே இருந்தனர். குடும்பம் குடும்பமாக லிரி வலம் செய்தனர். பலர் தங்களுடைய  சிறு   உறங்கும் கூடாரத்தில் (Sleeping tent)  இரவு படுத்து உறங்கிவிட்டு கிரி வலத்தை மறு நாள் தொடர்ந்தனர்.    ஒரு சிலர் அப்படியே பனி படர்ந்த தரையில் படுத்து உறங்கி விட்டு காலையில் கிரி வலம் துவங்கியதைப் பார்த்தபோது இவர்களைப் பார்த்து  ஆச்சிரியப்படாமலிருக்கவில்லை.



கிரி வலப்பாதையில்  பல இடங்களில் இது போல  மில்ரெபாவின் காலடித்தடம் கொண்ட    புனித இடங்களைப் பார்க்க முடிந்தது. அவியெல்லாம் பல வர்ண பிரார்த்தணை கொடிகளால் நிறைந்திருந்தன.   ஆனால் பெயர்ப்பலை சீன மற்றும் திபெத்திய மொழியில் இருப்பதால் சரியாக தெரியவில்லை.  கூட்டம் அதிகமானதால் குப்பையும் அதிகமால கிடந்தது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான கேன்கள், சிப்ஸ் பாக்கட் உறைகல் என்று எங்கு நோக்கினும் குப்பை நிறைந்து கிடந்தது. ஐயா உனக்கு அப்பர் பெருமான் செய்தது போல உழவாரப்பணி யார் செய்வார்கள். யாருடைய மனதிலாவது அந்த கருத்தை ஏற்படுத்து என்று வேண்டிக்கொண்டே கிரி வலத்தை தொடர்ந்தோம்.    




"ஓம் மணி பத்மே ஹம்" என்ற வாசகங்கள் செதுக்கப்பட்ட மணி கற்கள் இந்தத் தடவை அதிகமாகவே கண்ணில் பட்டது.  ஒரு கல் தச்சர் அங்கேயே அமர்ந்து செதுக்கிக்கொண்டிருந்தார். பலர் அதை விலைக்கு வாங்கி  சமர்பித்துவிட்டு செல்வதையும் கண்டோம்.  

மணிகற்களின் அருகே அடியேன், குமாரசாமி ஐயா

நடுவே பல வண்ண மண் கொண்ட பகுதி

இவ்விடம்  டாகினிகள்  நாட்டியமாடும்  அரங்கம்  ( Dakini Dancing Ground) என்று அழைக்கப்படுகின்றது.  இங்கு மண் சிவப்பாக இருப்பதற்கான காரணம்  ஜேசர் என்னும் திபெத்திய அரசர்  ட்ராங் என்னும்  வன யாக்கை இங்கு கொன்றதால தன் இரத்தத்தினால் மண் சிவப்பாகியது என்று நம்பப்படுகின்றது. மேலும் பட்டை, கறுப்பு மண்களையும் இப்பகுதியில் காணலாம். சில பக்தர்கள் இந்த பல வண்ண மண்ணை தங்கள் இல்லம் எடுத்து செல்கின்றனர்.  



ஆற்றின் மறு கரையில்  புதுப் பாதை அமைக்கப்பட்டு வருகின்றது அதில் வண்டிகள் எளிதாக செல்ல முடியும். ஜாங் சூ ஆற்றின் இடையேயும் ஒரு பாலம் கட்டப்பட்டு வருகின்றது. இப்பகுதியிலும் மீட்பு வண்டி, மருத்துவ வண்டி ரோந்து வந்து கொண்டிருக்கின்றது. 



குர்லா மாந்தாதா மலைச்சிகரங்கள்  இராக்ஷஸ்தால் ஏரி

இன்றைய கிரிவலத்தின் போது குர்லா மாந்தா மலைச்சிகரங்கள், இராக்ஷஸ் தால் ஏரி மற்றும் பார்க்கா சமவெளியின் அருமையான காட்சிகளை பறவைப் பார்வையாக பார்க்கும் வாய்ப்பு கிட்டுகின்றது. 

எங்களுக்காக காத்துக்கொண்டு நின்ற பைரவர்

ஐயனின் கருணையை என்னவென்று சொல்ல பைரவரின் வாகனத்தையே மூன்று நாட்களும்   எங்களுக்கு துணையாக அனுப்பிவைத்தார். பைரவரே எங்களுக்கு காவலாக வந்ததாக உணர்ந்தோம்.  முதல் நாள் கிரி வ்லத்தின் போது மேற்கு முகத்தின் அருகில் முதலில் கவனித்தோம், டேராபுக் முகாம் அடையும் சமயத்தில் கண்ணில் பட்டது. டோல்மா ஏறும் இரு முறை கண்ணில் பட்டது, டோல்மாவிலும் உடன் நின்றது, இன்றைய தினம் கண்ணில் படவில்லையே என்று நினைத்தோம். ஆனால் ஜாங்டோவில் நுழைந்த போது எங்களுக்காக காத்துக்கொண்து இருந்தது.  என்ன ஒரு அதிசயம் எங்கள் குழுவில் எழுவருக்கும் பல் வேறு சமயங்களில் காட்சி கிட்டியது. 


கிரி வலம் நிறைவு செய்த பின் ஜெகதீசன்,  அடியேன் 

இளங்கோவன், குமாரசாமி , அடியேன்

குதிரைக்காரர்களுடன் 


 இறைவன் அருள் பெற்ற எழுவர் 

 அவன் அருளால் தான் அவன் தாள் வணங்க முடியும்.    ஜெகதீசன், இளங்கோவன், குமாரசுவாமி, அடியேன், செந்தில், சேகர் -  ரேவதி  தம்பதியினர். ஆகிய எழுவர் அந்த சிவசக்தியின் அருளால் கிரி வலத்தை முழுமையாக நிறைவு செய்தோம்.  பின்னர் திபெத்திய நிறுவன பேருந்து மூலம் டார்ச்சன் அடைந்தோம்  அடுத்த பதிவில் டேராபுக்கில் இருந்து  திரும்பிச்சென்றவர்கள் பெற்ற தரிசனங்களைப் பார்ப்போம் அன்பர்களே. 

சாதிகுலம் பிறப்புஎன்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் 
ஆதம்இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு;
பேதைகுணம்; பிறர் உருவம் யான் எனதுஎன் உரை மாய்த்து
கோதுஇல் அமுது ஆனானை குலாவு தில்லை(கயிலை) கண்டேனே!

                                                                                                                                                   யாத்திரை தொடரும் . . . . . .