Showing posts with label அஷ்டபத். Show all posts
Showing posts with label அஷ்டபத். Show all posts

Thursday, June 20, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -31 (திருக்கயிலாய யாத்திரை-2012)

அஷ்டபத்தில்  ஆனந்த   தரிசனம் 

திருக்கயிலாயம் நந்திபர்வதம் ரிஷப தேவர் நினைவிடம்

அஷ்டபத் நோக்கி வண்டியில் செல்கின்றோம்

செல்லும் வழியில்

உறைந்த பனியாற்றைக் கடக்கின்றோம்



பனியாற்றிலிருந்து  ஒரு தாரை


பனியிலும் புல்

பனியில் கோயல் குடும்பத்தினர்

ஹிமான்சு, புனிதா, குப்தா, மஹேந்திர குமார்

ஆற்றைக் கடந்து நடைப் பயணம்

எடி அஹர்வால்


வழியில் பல முயல்கள் (எலியோ???)



தெற்கு முகத்தின் முதல் தரிசனம்


இன்னும் அருகே செல்கின்றோம்

ஐயனின் திருமுன் கௌஷிக் குடும்பத்தினர்

மேகம் விலக காத்திருக்கின்றோம்

ஆனந்தக் கூத்தனின் ஆனந்தக் காட்சி

அம்பலவாணரின் அற்புத தரிசனம்

திருமுடி, த்ரிநேத்ரம், ஜடாமுடி, கணேசர், கிழக்கு முகத்தின் ஒரு பகுதி  அனைத்தையும் மிக அருகில் இருந்து  திவ்யமாக தரிசனம்  செய்கின்றோம்


ஜடா முடியை சிலர் மேரு தண்டா என்று அழைக்கின்றனர்


கணேசர், ஐயன் மற்றும் நந்தி

2005ல் சென்ற போது மேகமில்லாமல் நிர்மலமான வானத்துடன், பனியும் குறைவாக இருந்த போது  அஷ்டபத்தில் இருந்து எடுத்த படம்.

ஐயனுக்கு எதிரே நந்தியெம்பெருமான்

நவரத்னங்கள் பதித்த பொன்மயமான ஊஞ்சலில் திருவோலக்கம் கொண்டு எழுந்தருளியிருக்கும்,பவளம் போல் பால் வெண்ணீறு அணிந்த சிவெபெருமானையும், பச்சை பசுங்கொடியாம் பார்வதியையும் தனது மூச்சுக் காற்றால் குளிர்வித்துக்கொண்டிருக்கும் நந்தியெம்பெருமான்.  

 ஜைனர்களின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவர் நினைவிடம்
( சுதார் )

திருக்கயிலாயம், நந்தி, ரிஷப தேவர் நினைவிடம்
 மூன்றும் இனைந்த காட்சி



ஈசனடி போற்றி, எந்தை அடி போற்றி, 
தேசன் அடி போற்றி,சிவன் சேவடி போற்றி

ஐயனை தரிசனம் செய்து விட்டு
 ஆனந்தமாக திரும்பி வருகிறோம்



சுந்தர், பாபு, வைஷ்ணவ்
காலை சுமார் 6 மணியளவில் மானசரோவரிலிருந்து புறப்பட்டோம். தார்சாலையை விடுத்து இரு பக்கமும் ஒரே வெள்ளிப்  பனி மயம். பனிப் பொழிவும் லேசாக இருந்தது.  மலையரசன் பொற்பாவை உடனாய் திருக்கயிலை நாதனை தரிசனம் கிட்ட வேண்டும், கிரி வலம் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டே பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டே சென்றோம் சுமார் அரை மணி நேரம் கழித்து அவனருளால் அவன் தாள் வணங்க செல்லும் எங்கள் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து பனிப் பொழிவை நிறுத்தினார். டார்ச்சனை நெருங்கிய போது ஐயனின் கருணை முகம் கொண்டு சூரியனாக வெளிப்போந்து வந்து ஆசீர்வாதம் செய்தார். டார்ச்சனை அடைந்த போது நல்ல வெயிலாக இருந்ததால் முதலில் அஷ்டபத் தரிசனத்தை முடித்து விடலாம் என்று புறப்பட்டோம்.

 சேர்ப்பாக்கள்  ஒருவருக்கு 100 யுவான்கள் வீதம்  லேண்ட குரூசியர் வண்டி ஏற்பாடு செய்து கொடுத்தனர். சுமார் மூன்று கி.மீ இருக்கும் போதே பனி ஆறு உறைந்து கிடந்ததால் வண்டி கடக்க முடியாது என்று இறக்கி விட்டு விட்டனர். சென்ற தடவை சென்ற போது ஆற்றைக் கடந்து அஷ்டபத் மிக அருகில் சென்று  இறக்கி விட்டார்கள். இந்தத் தடவை ஆறு உறைந்து கிடந்ததால் மூன்று கி.மீ முன்பாகவே இறக்கி விட்டனர்.  கால் நடையாக மிகவும் கவனமுடன்  உறைந்து கிடந்த பனியாற்றை கடந்து அப்புறம் சென்று சுமார்  மூன்று கி.மீ தூரம் மேலும் கீழுமாக  நடந்து சென்று ஐயனையும் நந்தியெம்பெருமானையும், ரிஷப தேவரின் முக்தி ஸ்தலத்தையும் தரிசனம் செய்தோம். ஆனால் மிக அருகில் செல்ல முடியவில்லை நிர்மலாக ஐயனின் தரிசனம் கிட்டவில்லை ஆயினும் அந்த வ்யோமகேசர் - அதாவது ஆகாயத்தையே தனது ஜடாமுடியாக கொண்ட ஈசன் தனது ஜடா முடியில் இளம் பிறை, சலமகள், பொற்கொன்றை, ஊமத்தை, எருக்கு அணியும் பரம கருணா மூர்த்தி இன்று கொண்டல்களும் அணிந்து தரிசனம் அளித்தார்.  ஆம் அவரது முடி பாகத்தை இன்று மேகங்கள் அணி செய்து கொண்டிருந்தன. பனி முழுவதுமாக உருகவில்லை என்பதால் வெள்ளிக் கவசம் சார்த்தியது போல அருமையான  தரிசனம் தந்தார். 


வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி, காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி, கச்சாக நாகமசைத்தாய் போற்றி , காராகி நின்ற முகிலே போற்றி, கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி, காவாய் கனகத்திரளே போற்றி கயிலை மலையானே போற்றி என்று அப்பர் பெருமானின் "போற்றித் திருத்தாண்டகம்" பாடி அடி வீழ்ந்து வணங்கி விட்டு ஐயா உன்னை வணங்கி ஆரம்பிக்கும் உன் கிரி வலம் முழுமையடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு  இன்றே கிரி வலம் செய்ய வேண்டும் என்பதால் அதிக நேரம் அங்கே செலவழிக்காமல், சீக்கிரம் டார்ச்சன் திரும்பி வந்தோம்.
***********************

சேரமான் பெருமான் இயற்றிய

திருக்கயிலாய ஞான உலா

திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராதங்கண்
அருமால் உற அழலாய் நின்ற பெருமான்




Saturday, September 03, 2011

திருக்கயிலாய யாத்திரை 2011 -6




ஓம் நமசிவாய






அப்பர் பெருமான் அருளிச்செய்த

போற்றித் திருத்தாண்டகம்


சில்லுருவாய் சென்று திரண்டாய் போற்றி





தேவர் அறியாத தேவே போற்றி





புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி





போகாதுஎன் சிந்தை புகுந்தாய் போற்றி





பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி





பற்றி உலகை விடாதாய் போற்றி





கல்லுயிராய் நின்ற கனலே போற்றி





கயிலை மலையானே போற்றி போற்றி (6)




நற்றுணையாவது நமச்சிவாயவே என்று அறுதியிட்டு கூறிய திருநாவுக்கரச பெருமான் பாடிய இக்கயிலாய பதிகத்தை தினமும் நம்பிக்கையுடன் சிவபெருமானின் முன் திருவிளக்கேற்றி பாராயணம் செய்தால் நிச்சயம் திருக்கயிலை தரிசனமும் மானசரோவர் ஸ்நானமும் திண்ணம் என்பதால் ஒவ்வொரு பதிவிலும் ஒரு பாடல் இடம்பெறுகின்றது.









மிக்கோர் அமுதுண்ண தான் ஆழ் கடலில் இருந்து வெகுண்டெழுந்த ஆலாலம் உண்ட நீலகண்டனை, தியாகராஜனை, மணிமிடற்றண்ணலை தரிசிக்க புறப்பட்ட யாத்திரிகள் , யாத்திரையின் ஆறாம் நாள் 13-05-2011 அன்று மானசரோவரில் ஒரு முக்கியமான கடமையை நிறைவேற்றினர். ஆம் அன்றைய தினம் புனித மானசரோவரின் கரையில் தங்கிய அவர்கள் சிவபெருமானுக்கு மிகவுன் பிரீத்தியான ருத்ர ஹோமம் செய்து சிவசக்தியை வழிபட்டனர்.

காலையில் மீண்டும் மானசரோவரில் புனித நீராடி ருத்ர ஹோமத்தில் அனைவரும் கலந்து கொள்ளும் காட்சிகளை காண்கின்றீர்கள்.





ஹோமத்திற்கான பூர்வாங்க வேலைகள்



ருத்ர ஹோமம்



அடுத்த நாள் காலையில் மானசரோவரில் இருந்து புறப்பட்டு அவர்கள் டார்ச்சனை அடைந்தனர். டார்ச்சன் திருக்கயிலாய கிரி வலத்திற்க்கான ஆதார முகாம். கிரி வலத்திற்கு முன்னும் பின்னும் யாத்திரிகள் இந்தி தங்கிச்செல்கின்றனர். இங்கு தங்கும் விடுதிகள் நிறைய உள்ளன. இங்கு திபெத்திய கலைப்பொருட்கள் கிடைக்கும். குறிப்பாக சுத்தமான ஸ்படிக மாலைகள் கிடைக்கும். இங்கு தொலைப்பேசி வசதிகள் உள்ளன. கிரிவலம் தொடங்கும் முன் தங்கள் இல்லங்களை தொடர்பு கொள்ளலாம்.





தூரப்பார்வையில் திருக்கயிலாய மலை







இவர்கள் இன்றைய தினமே அஷ்டபத் சென்று ஐயனின் அருகாமை தரிசனம் பெற்றனர். ஐயனின் தெற்கு முகத்தையும், நந்தி தேவரையும் . சில சமயம் ஆத்ம லிங்கம் எனப்படும் பனி லிங்கத்தையும் அஷ்டபத்திலிருந்து அருமையாக தரிசிக்க முடியும். அஷ்டபத்திற்கு மிக அருகாமை வரை வண்டிகள் செல்கின்றன. இங்கு தான் ஜைனர்களின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவர் முக்தியடைந்தாத். அவ்விடத்தில் ஒர் சிறிய புத்த விகாரம் உள்ளது.




அஷ்டபத்தில் யாத்திரிகள்



திருக்ககயிலாயத்தில் கமனீயமான பொன் உஞ்சலில் திருவோலக்கம் கொண்டருளி, சகல புவனங்களையும் காத்து இரட்சிக்கும் சர்வேஸ்வரன் பவள வண்ணராம் சிவபெருமானையும், அவரது வாம பாகத்தில் என்றும் நீங்காமல் வாழும் அம்பிகை பச்சை நிறத்தாள் பார்வதி தேவியையும் எப்போதும் தனது மூச்சுக்காற்றால் குளிர்வித்துக் கொண்டிருப்பவர் நந்தியெம்பெருமான். இந்த அமைப்பை நாம் அஷ்டபத்தில் ஸ்பஷ்டமாக தரிசனம் செய்யலாம். மலை ரூபத்தில் நமக்கு சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தியின் விஸ்வருப தரிசனம் கீழே.


நந்தியெம்பெருமானின் விஷ்வரூபம்



பொதுவாக வெளி கிரிவலம் செல்லும் போதும், அஷ்டபத்தில் இருந்தும் நந்தியெம்பெருமானின் பின் தரிசனம்தான் கிட்டும். தாங்கள் மேலே பார்ப்பது நந்தியெம்பெருமானின் முன் பக்க தரிசனம், நந்தி கிரி வலம் சென்ற அன்பர் திரு. கயிலை பாலா அவர்கள் அனுப்பிய அரிய தரிசனக் காட்சி இது.














யாத்திரை தொடரும்…












Saturday, February 20, 2010

திருக்கயிலாய நந்தி கிரி வலம் - 2





சென்ற பதிவில் நந்தி கிரி வலத்தில் அஷ்டபத்தில் இருந்து கிளம்பி, சிலுங் புத்த விகாரம், அஷ்டபத், ஆத்மலிங்க தரிசனம் கண்டு பின் கைலாய கங்கை சங்கமம் கண்டு ஐயனின் திருவடித்தாமரைகளின் அடியை அடையும் வரை ஆன பகுதியை கண்டோம், இப்பதிவில் நந்தியெம்பெருமானின் முன் பக்க விஸ்பரூப தரிசனமும் சப்த ரிஷி குகையின் தரிசனமும் காண்போம்.

திருகயிலை பாலா அவர்களின் அனுபவத்தை ஆங்கிலத்தில் பார்க்க விரும்புபவர்கள் இங்கே கிளிக்கவும் நந்தி கிரி வலம்.



நந்தி கிரி வலத்தின் முக்கிய இடங்களையும் அவைகளுக்கிடையில் உள்ள தூரத்தையும், மொத்த தூரத்தையும், உயரத்தையும் காட்டும் அட்டவணை.
( படத்தை கிளிக்கி பெரிதாகப் பார்க்கலாம்)




மேலே இருந்து விழுந்த கற்களினால் பாதை மிகவும் சிரமமாக இருந்ததால் சேர்ப்பா கும்பு அவர்கள் முன்னே சென்று பாதையை சரி செய்யும் காட்சி. அவருடன் சேர்ப்பா ஆங்செரிங் அவர்களும் உடன் இருக்கின்றார்.




ஆத்ம லிங்க தரிசனத்திற்க்குப் பின் செங்குத்தான சுமார் 0.5 கி, மீ ஏற்றம் மிகவும் கடினமானதாக இருந்ததாம். திருக்கயிலாய மலையின் தெற்கு திருவடி மலை அது கையில் கயிறோ அல்லது வேறு மலை ஏறும் சாதனங்கள் ஏதும் இல்லையாம். இந்த நந்தி கிரி வலத்தின் மிகவும் உயரமான இடம் இது என்பதால் ஆக்ஸிஜன் மிகக் குறைவாகவே இருந்ததாம், அதிலும் செங்குத்தான மலையேற்றம் , மிகவும் சிரமப்பட்டுத்தான் மூச்சு முட்டியதாம், மேலிருந்து கற்கள் விழும் அபாயம் இருந்ததால் சேர்ப்பாக்கள் அப்படியே இவர்களை இழுத்துச்சென்று சப்த ரிஷி குகைகளில் சேர்த்தார்களாம், நடுவில் மூச்சு வாங்க ஒரு நிமிடம் நிற்கககூட முடியவில்லையாம்.





ஒருவர் பின் ஒருவராகத்தான் ஏற முடிந்ததாம் அந்த கடவுள் உருவத்தில் சேர்ப்பாக்கள் கையைப் பிடித்துக்கொண்டு மேலே ஏற்றும் காட்சி படத்தில் கயிலை ஆனந்த்.

மிகவும் மேலே கஷ்டப்பட்டு ஏறும் காட்சி



தெற்கு கயிலாயத்தின் திருவடி



மலைப்பகுதி செங்குத்தாக இருப்பதையும் மிகவும்
சிரமத்துடன் யாத்திரி ஏறும் பாங்கையும் காட்டும் படம் .




இவ்வளவு சிரமத்துக்கிடையிலும் ஐயனின் கருணை மழை இவர்கள் மேல் பொழிந்த அற்புத காட்சி. மிகவும் சிரமப்பட்டு மேலே ஏறி வரும் தனது அடியார்களை தனது அமுத தாரையினால் ஐயன் குளிமைப்படுத்தும் காட்சி. இதனால் அன்றோ இவரை போலே பாபா ( எளிமையானவர்) என்று வணங்கி மகிழ்கின்றனர் அன்பர்கள்.


கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

இவ்வளவு கஷ்டப்பட்டு மேலே ஏறி ஐயனின் திருவடியில் இருக்கின்ற சப்த ரிஷி குகையை அடைந்து சிறிது நேரம் பொறுத்துத்தான் அவர்களது மூச்சு சரியாக ஆனதாம். ஐயனின் திருவடியை ஸ்பரிசித்த ஆனந்தத்தில் ஐவரும் சப்தரிஷி குகையை அடைந்தனர்.




சென்னையை சேர்ந்த கயிலை ஆனந்த சுமார் இருபது தடவை திருக்கயிலாய யாத்திரை செய்துள்ளார் , இந்தத் தடவைதான் அவர் வெற்றிகரமாக நந்தி கிரி வலத்தை முடித்துள்ளார். அவர் கயிலை சந்திரா அவர்களுக்கு உதவும் காட்சி. இவ்வளவு கடினமான பாதையில் ஒருவருக்கொருவர் உதவினால்தானே அனைவரும் யாத்திரையை முடிக்க முடியும்.


ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

எவ்வளவு அருமையான ஒரு வாய்ப்பு, எத்தனை ஜென்ம புண்ணியத்தின் பலனாக இந்த வாய்ப்புக் கிடைத்தது. அந்த சிவசக்தி உளம் மகிழ்ந்து தங்களின் திருவடி ஸ்பரிசம் பெற ஐவரையும் அனுமதித்துள்ளார். அதற்காக தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளும் அன்பர்கள்.


இந்த யாத்திரையை வெற்றிகரமாக நடத்திக்கொடுத்த கயிலை பிமல்
( நிறுவனர் - ECOTREK NEPAL) அவர்கள் அந்த மலையரசன் பொற்பாவைக்கும், திருக்கயிலை நாதருக்கும் தன் நன்றியை தெரிவித்துக் கொள்ளும் காட்சி




உள்ளத்தில் ஆனந்தம் பொங்க கௌரி அம்மைக்கும் மலையரசன் மருகனுக்கும் கண்ணில் ஆனந்த பாஷ்பம் மீதூர இவர்கள் ஐவரும் அப்படியே அமர்ந்து சிவ புராணத்தையும் தேவார திருவாசகப் பாடல்களையும் பாடி அந்த சிவசக்தியை வணங்கி தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். ஐயா உனது திருவடி ஸ்பரிசித்து எங்கள் ஜென்ம சாபல்யம் அடைந்தோம். இனி ஒரு அன்னை கரு வராமல் எங்களை இந்த் சம்ஹார சாகரத்தில் இருந்து காப்பாற்று என்று வேண்டிக் கொண்டார்களாம்.

As a sense of gratitude, we sat and sang some devotional songs. Tears rolled, voice chocked, we were emotionally delighted, we shed the tear of joy, celebrated the attainment of this Parikrama. The full version of Sivapuranam was sung and we couldn’t stop the profusely rolling tears from our eyes as much as we could not stop the intense happiness in our hearts. - Kailai Bala



As a sense of gratitude, we sat and sang some Sivapuranam in full and other devotional songs. Tears rolled, voice chocked, we were emotionally delighted

சப்த ரிஷி குகையில் ஆனந்த ஐவர்

சிவபுராணம் ஓதும் காட்சி



Kailai Nada, Meganathan, Kailai Vira, Kailai Karul, Devan and Tamila were not gifted to have the holy darshan despite being so near to HIM

அருகில் வந்தும் திருவடி தொழ மட்டுமே முடிந்த அறுவர்

சமயம் அதிகமாகிவிட்டதால் இந்த அறுவரும் ஆத்ம லிங்க தரிசனத்துடனே திரும்பிச்செல்லும் படியாகிவிட்டது. அவர்களுக்கு ஐயனின் திருவடிகளைத் தொட இன்னும் சமயம் வரவில்லை. அனைவரும் மேலே ஏற அனுமதித்தால் இன்னும் சமயம் அதிகமாகும் மேலும் அனைவரும் திரும்பும் போது பிரச்சினை ஏற்படலாம் என்பதால் யாத்திரையை ஏற்பாடு செய்த பிமல் அவர்கள் முடிவு எடுத்தார் இவர்கள் அறுவரும் அந்த முடிவை ஏற்றுக்கொண்டு அங்கேயே இருந்து ஐயனின் அடியை அடைந்த ஐவரும் இன்னும் உள்ள பாதையையும் வெற்றிகரமாக சிவசக்தி அருளால் கடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அங்கேயே வெகு நேரம் இருந்து பிரார்த்தனை செய்து கொண்டு பின்னர் திரும்பி டார்ச்சன் முகாம் திரும்பி விட்டனர்.


Serdung Chuk Sum - 13 Golden Chortens

சப்தரிஷி குகையில் அமைந்திருக்கும் 13 ஸ்தூபிகள்

ஐயனின் திருவடி நிழலில் அமைந்துள்ள சப்தரிஷி குகை திபெத்திய மொழியில் செர்துங் சுக் சம் என்றும் அழைக்கப்படுகின்றது. செர் என்றால் பொன், துங் என்றால் ஸ்தூபி, சுக் சம் என்றால் பதின்மூன்று, அதாவது பதின்மூன்று பொன் ஸ்தூபிகள் என்று பெயர். இவற்றை உள் கிரி வலப் பாதையில் உள்ள கெங்டா புத்த விகாரத்தினர் பராமரித்து வருகின்றனர். ஐயனின் நிழலில் இவை இருப்பதால் அதிகமாக பழுதடையவும் இல்லை.




These chortens are protected to a certain extend by the long horizontal crack which prevents the rock fall and snow from damaging it.

சப்தரிஷி குகைக்கு வரும் அன்பர்கள் தங்கள் நினைவாக பல பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு செல்கின்றனர். ஒரு பகவத் கீதை்யை பார்த்ததாக கயிலை பாலா கூறுகின்றார். இவர் தன் பங்கிற்கு ஒரு கல்யாண அழைப்பிதழையும் அவருடைய பெற்றோர்களின் ஸ்தோத்திர புத்தகத்தையும் அம்மையப்பரின் திருவடிகளில் அர்பணித்தாராம்.



ஐயனின் திருவடியில் ஐவரும் சுமார் ஒன்றரை மணி நேரம் அமர்ந்து இருந்து சுற்றிலும் உள்ள இயற்கைக் காட்சிகளை கண்டு களித்தனர். பிரார்த்தனை செய்தனர். அதே சமயம் திரும்பி செல்வதற்கான யாத்திரைக்காக தங்கள் உடலுக்கு வேண்டிய ஒய்வெடுத்துக் கொண்டனர்.

Group photo for the Album

Kailashis Chandra, Bala, Rajan, Karu, Nagarajan, Bimal, Krishna, Basu and porters are seen in this photo.

( Sherpa Angsering and Kailai Anantha not seen )


நந்தி கிரி வலத்தின் போது கிடைத்த ஒரு அற்புதக்காட்சி


ஐயனின் பூதப்படையின் முதல்வர் நந்தியெம்பெருமான், வெள்ளை விடையாக ஐயனை எப்போதும் தாங்கும் பேறு பெற்றவர் இவரே. ஐயனின் வாகனமும் கொடியும் ரிஷபம் எனப்படும் நந்திதான். மேலும் திருக்கயிலாய மலையை காவல் காப்பவர் இவரே , யாரை ஐயனை தரிசனம் செய்ய உள்ளே அனுமதிக்கலாம் என்னும் அதிகாரம் பெற்றவர் இவர் என்பதால் இவர் அதிகார நந்தி என்றும் அழைக்கப்படுகின்றார். ஐயனின் மானும் மழுவும் கரங்களில் ஏந்தி பொற்பிரம்பு கையில் ஏந்தி திருக்கயிலை மலையை காவல் காக்கும் அதிகார நந்தி வாகனத்தில் சிவபெருமான் பிரம்மோற்சவ காலங்களில் மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி வாகனத்தில் சேவை சாதிப்பதை காண்பதே ஒரு அழகு. இவர் மனைவி சுயம்பிரபா தேவி. பிரதோஷ காலத்தில் சிவ பெருமான் தியாகராஜன் நந்தி தேவரின் கொம்புகளுக்கிடையில் ஆனந்த தாண்டவம் ஆடியதால் பிரதோஷ வேளையில் நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. சிவ நிந்தணை செய்த இராவணன், தக்ஷன் ஆகியோருக்கு சாபம் கொடுத்து அவர்கள் அழிவுக்கு வழி வகுத்தவர் நந்தி தேவர் ஆவார். தாங்கள் கீழே காண்பது அந்த நந்தி தேவரின் முன்பக்க விஸ்வரூப தரிசனம். நாம் அநேகமாக வெளி கிரி வலம் செய்யும் காலத்தில் நந்தியின் பின் பக்க தரிசனம் மட்டுமே கிடைக்கின்றது. இந்த முன்பக்க தரிசனம் பெற்ற கயிலை பாலாவிற்கு அநேக நன்றிகள் இதை அனைவருடனும் பகிர்ந்து கொண்டதற்காக.


Nandhi Bhagawan in full Viswaroopam


The above photo of Nandhi Bhagavan in viswaroopa is unique and a very rare seen anywhere. The usual view is the one taken from Astapad. This photo was taken from the Saptarishi Caves.



நந்தி கிரி வலம் தொடரும் ..............