Saturday, February 01, 2020

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 17

கிரிவலம்

மறுநாள் இனிமையாக விடிந்தது, கிரி வலம் செல்லும் அன்பர்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து ஐயனை வலம் வந்து மற்ற முகங்களையும் தரிசிக்கும் ஆர்வத்தில் தயாராகி பேருந்துக்காக காத்திருந்தனர். கிரி வலத்தின் நடைப்பயணம் தற்போது யமத்துவாரத்திலிருந்துதான் துவங்குகின்றது. அது வரை பேருந்தில் செல்ல முடியும். அடியேனும் கிரி வலம் செல்லும் அன்பர்களுடன்  பேருந்தில் சென்றேன். யம துவாரத்தில் நுழைந்து தேவ பூமியில் சென்று அடி வீழ்ந்து ஐயனை வணங்கினேன். யம துவாரத்தைக் கடப்பவர்கள் யமபயத்தில் இருந்து விடுபடுவர் என்பது ஐதீகம்.


டார்ச்சனில் இருந்து நமக்கு திருக்கயிலை நாதரின் திருமுடி தரிசனம் மட்டுமே கிட்டும். இங்கு யமத்துவாரத்தில் இருந்து ஐயனின் அகோர முகத்தின் (தெற்கு முகம்) முழு தரிசனமும் கிட்டும். டோக்சனில் இருந்து பெற்றதும், மானசரோவர் கரையில் இருந்து பெற்றதும் தெற்குமுக தரிசனம் என்றாலும், யமதுவாரம் தெற்கு முகத்திற்கு அருகில் இருப்பதால் ஐயனின் அருகாமை தரிசனம் கிட்டும் கணேசரின் தரிசனத்தையும் அருமையாக பெறலாம். அடியேன் சென்ற சமயம் மேகம் மூடியிருந்ததால் முழு தரிசனம் கிட்டவில்லை.


அதிகாலையில் ஐயனின் தரிசனம்

மதிய வேளையில்


மேலும் திபெத்திய பௌத்தர்கள் வைகாசி பௌர்ணமியன்று மிகவும் உயரமான ஐந்து வர்ண கொடியை இங்கு ஏற்றுகின்றனர்சாகா தாவா என்றழைக்கப்படும் இந்த கொடி ஏற்றப்பட்டப்பின் அக்ககொடிக் கம்பத்திலிருந்து கூம்பு வடிவத்தில் பல அன்பர்கள் தங்கள் பிரார்த்தணை கொடிகளை கட்டுகின்றனர்புத்தர்களுக்கு திருக்கயிலாயம் அவர்களின் தெய்வம் எனவே அவர்கள் இவ்வாறு வழிபடுகின்றனர்அக்கொடி மரத்தையும் சுற்ரி வணங்கி விட்டு அடியேன் பேருந்தில் திரும்பி வந்தேன்  கிரி வலம் சென்ற அன்பர்கள் தங்கள் நடைப் பயணத்தை  துவக்கினர்.





டார்ச்சனில் தங்கியவர்கள்








*******************


கிரி வலம் சென்றவர்கள் பெற்ற காட்சிகள்



இனி கிரி வலம் சென்ற அன்பர்களின் அனுபவம்முதல் நாள் கிரி வலத்தின் போது யமதுவாரத்திற்கருகில் தெற்கு முகத்தின் தரிசனமும்பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்குப்பின் மேற்கு முகத்தின் தரிசனமும்அதற்குப்பின் மேற்கு முகம் மற்றும் வடக்கு முகம் இணைந்த தரிசனமும்அன்றைய கிரி வலத்தின் நிறைவாக வடக்கு முகத்தின் முழு தரிசனத்தையும் பெறுகின்றனர்அன்று டேராபுக் என்ற இடத்தில் தங்குகின்றனர்அத்தங்கும் விடுதிகள் வடக்கு முகத்திற்கு நேரெதிரே அமைந்துள்ளதுகுழுவினருக்கு வடக்கு முகத்தின் அருமையான தரிசனம் கிட்டியதுசிலர் மலையேறி வடக்கு முகத்தின் திருவடி வரை சென்று வந்தனர்



கிரிவலப்பாதை


மேற்கு முக தரிசனம் (சத்யோஜாதம்)

திரு.குமாரசாமி 


வடக்கு முக தரிசனம் ( வாமதேவம்)


கிரிவலம் சென்ற திரு.குமாரசாமி ஐயா தனது அனுபவத்தைப் பற்றி இவ்வாறு உரைக்கின்றார் “திருக்கயிலாயத்தில் அமர்நாத் தரிசனம்” . முதல்நாள் திருவலச்சுற்றில் எங்களுக்கு  காட்சி தந்த திருவருள் அதுவே எங்களுக்கு கிடைத்த பெரும் சிவப்பொருள்நிறையப்பேருக்கு  இது தெரிய வாய்ப்பில்லை எங்களோடு வந்தவர்கள் மட்டுமே அறிவர்ஐயனின் தரிசனம் அவர்களுக்கு அவ்வளவு அருமையாக இருந்துள்ளது.
இவர் இரண்டாவது முறையாக அடியேனும் திருக்கயிலாய யாத்திரைக்கு வந்தார் தேவாரப் பாடல்களை சுரத்துடன் பாட வல்லவர்,  ( அவரின் பல படங்கள் இப்பதிவில் இடம் பெற்றுள்ளன)





திரு.குமாரசாமி ஐயா

இனி டார்ச்சனில் இருந்த அன்பர்கள் ஐயனின் முன் அமர்ந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்தோம்நிமிடத்திற்கு நிமிடம் மாறும் ஐயனின் அழகை தரிசித்துக் கொண்டிருந்தோம்.  மனதில் ஒரு ஏக்கம் இருந்தது ஆனால் அவன் அருளால்தானே அவனை வணங்க முடியும்இறைவன் சித்தம் இதுதான் என்று மனதை தேற்றிக்கொண்டு கிரி வலம் சென்றவர்கள் அனைவரும் எச்சிரமும் இல்லாமல் கிரி வலத்தை முடிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்தோம்கிரிவலம்  எவ்வாறு நிறைவு பெற்றது  என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.   



Sunday, January 26, 2020

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 16

மானசரோவர் புனித நீராடல்

மானசரோவரின் கரையில் இரவு தங்கினோம். அதிகாலையில் இருள் பிரியாத நிலையில் எழுந்து சில அன்பர்கள் மானசரோவரில்  இறங்கி குளிக்கும் பாக்கியம் கிட்டியது. சூரிய வெளிச்சம் வந்த பின் எழுந்தவர்களுக்கு அப்பாக்கியம் கிட்டவில்லை. தங்கும் விடுதிகளுக்கு அருகில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்திருந்தனர். மேலும் எங்களை அழைத்து சென்ற சேர்ப்பாக்களும் யாராவது ஏரியில் இறங்கி குளித்தால் எங்களது அனுமதி இரத்தாக்கும் எனவே எங்களுடன் ஒத்துழையுங்கள், என்று வாளிகளில் மானசரோவர் தீர்த்தத்தை முகர்ந்து கொடுத்தனர்பெருபான்மையோர் கரையில் நின்று அத்தீர்த்தத்தில் குளித்தோம். ஒரு வருடம் மே மாதம் யாத்திரை செய்த போது ஏரி முழுவதும் உறைந்திருந்தது. அவ்வருடம் எனவே பனியை உடைத்து தண்ணீரை இவ்வாறு வாளியில் முகர்ந்து குளித்தோம். இவ்வருடமும் அதே போலத்தான் குளிக்க முடிந்தது.




மானசரோவர் கரையிலிருந்து திருக்கயிலை நாதர்  தரிசனம்




புனித நீராடல் 




அபிஷேகம் 

அடுத்து அவரவர்கள் கொண்டு வந்திருந்த மூர்த்திகளை மானசரோவரின் கரையில் வைத்துஎதிரே இருக்கின்ற திருக்கயிலை நாதருக்கு அபிஷேகம்பூசைகள் செய்வது போல பாவித்து அபிடேகம் செய்து பூசனைகள் செய்தோம்நன்றாக மழை பெய்து அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று மலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரை இறைஞ்சினோம்










 வில்வ தளங்களால் அர்ச்சனை




அடுத்து  சுற்றுலா நிறுவனத்தினரின் சார்பில் நடைபெற்ற யாகத்தில் பங்கேற்றோம்பௌர்ணமியன்று நடைபெற்றிருக்க வேண்டிய யாகம் தாமதமாக வந்ததினால் மூன்று நாள் கழித்து நடைபெற்றதுயாத்திரிகளில் ஒரு சிவாச்சாரியார் இருந்தார் அவரே யாகத்தை சிறப்பாக நடத்தினார்அனைவரும் பிரசாதம் பெற்றுக்கொண்டோம்.




மானசரோவர் கரையில் யாகம்


சியூ புத்த விகாரம்



மானசரோவர் விடுதி

பிறகு மதிய உணவிற்குப்பின் டார்ச்சனுக்கு புறப்பட்டோம்இத்தடவை சியூ புத்த விகாரம் செல்ல முடியவில்லைடார்ச்சன் செல்லும் வழியிலும் ஐயனின் அருமையான வெள்ளிக் கவசம் போர்த்திய தரிசனம் கிடைத்ததுஎந்த வித சிரமமும் இல்லாமல் டார்ச்சன் வந்தடைந்தோம்இங்கும் சென்ற தடவை போல சோதனை இருக்கவில்லைஇங்கும் ஏமாற்றம் தொடர்ந்தது அவர்கள் கூறியபடி தங்கும் விடுதியில் தங்க வைக்கவில்லை ஒரு மோசமான விடுதியில் தங்க வைத்தனர்.. ஐயனின் பல்வேறு கோலங்களை தரிசித்தோம்.


டார்ச்சனில் இருந்து திருக்கயிலாய தரிசனம் 


சரியாக உடல் பதப்படாததால் பலருக்கு உடல் நிலை சரியாக இல்லாமல் இருந்தது சேர்ப்பாக்கள் அனைவரது இரத்த அழுத்தத்தையும்உடலில் உள்ள பிராண வாயுவின் அளவையும் பார்த்துசரியாக உள்ளவர்களை மட்டுமே கிரி வலத்திற்கு அனுமதித்தனர்அடியேனுக்கு இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்ததால்  கிரி வலம் செய்யும் வாய்ப்பு இத்தடவை கிட்டவில்லைஎல்லாம் அவன் செயல்என்று மனதை தேற்றிக்கொண்டு அவரின் காலடியில் அமர்ந்திருந்தேம்குழுவினரில் பாதிக்கு மேற்பட்டவர்கள்  செல்ல முடியாமல் போனதுகிரி வலத்தை அனைவரும் முழுதாக முடித்தனரா என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே