Showing posts with label நைலம். Show all posts
Showing posts with label நைலம். Show all posts

Tuesday, April 14, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 25

அன்பர்கள் அனைவருக்கும் இனிய மன்மத வருட புத்தாண்டு வாழ்த்துகள்
மலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் மாப்பெருங்கருணையினால் தாங்கள் அனவரும் தங்கள் குடும்பம் உறவினர் நண்பர்கள் ஆகியோருடன் நலமாக வாழ பிரார்த்திக்கின்றேன். 


காத்மாண்டு திரும்பினோம்

 வழியில் பல  மணல் மேடுகள் 

சென்ற வழியிலேயே திரும்பினோம். திருன்பி வரும் போதும் வேகக்கட்டுப்பாடு இருந்தது. அங்கங்கே நின்று நின்றுதான் வந்தோம். முதல் நாள் டோங்பாவிலும் இரண்டாம் நாள் நைலத்திலும் தங்கித்தான் வந்தோம். அதே சென்ர தடவை முதல் நாளிலேயே சாகா வந்து மறு நாள் காத்மாண்டு அடைந்தோம். அதன் மூலம் காத்மாண்டை சுற்றிப்பார்க்க ஒரு நாள் அதிகமாக கிடைத்தது. இந்தத்தடவை அது மாதிரி நடக்கவில்லை.    

பிரம்மபுத்திரா உற்பத்தி ஸ்தானம் 

நடுவில் ஒரு கிராமத்தில் தங்கினோம். அங்கே இந்த இடம்தான் பிரம்மபுத்திராவின் உற்பத்தி ஸ்தானம் என்ற அறிவிப்புப்பலகை இருந்தது. அடியோங்கள் சென்ர பாதை தெற்கு பாதை பிரம்மபுத்திரா நதியை ஒட்டி செல்லும் பாதை ஆகும். 

பிரம்மபுத்திரா நதியின் அருகே ஒரு பழைய பாலம் 


முதல் நாள் பழைய டாங்போவில் அதே தங்கும் விடுதியில் தங்கினோம் 

பிரம்மபுத்ரா நதிக்கரையில் சாகா  

சாகா அடைந்து விட்டோம் 


சீ சா பாங் மா சிகரங்கள்


பொதுவாக இவ்வழியில் லா லுங் லா கணவாய்,  8000  மீ உயர சீ சா பாங் மா சிகரங்கள்  மற்றும் பைகு சோ ஏரி ஆகிய நின்று இரசித்து விட்டு செல்வோம். சென்ற போது இங்கெல்லாம் நிற்கவில்லை என்பதால் வரும் போது நின்று இரசித்து புகைப்படமும் எடுத்துக்கொண்டு வந்தோம்.   




பைகு சோ ஏரி
உப்புத்தண்ணிர் ஏரி 


வானில் மானசரோவர் ராக்ஷஸ் தால் ஏரிகள்


அருமையான தரிசனம் கிட்டிய ஆனந்தத்தில் திரும்புகின்றோம் 





இப்பாதையின் உயரமான லா லுங் லா கணவாய் 



நைலத்தை நெருங்கும் போது மீண்டும் பசுமை 

ஒரு செழுமையான கிராமம்

நைலத்தில் கான்க்ரீட் சாலை பணிகள் 

நைலத்தில் இருக்கும் போதே கொடாரியில் இருந்து காத்மாண்டு செல்லவேண்டும் என்று முடிவு செய்தவ்ர்கள் சென்னையில் உள்ள ஒரு உறவினர் மூலம்  ஆன் லைன் வழியாக  ஹெலிகாப்டருக்கு முன்பதிவு செய்து கொண்டோம். ஒரு வருக்கு ரூ 15000/ ஆனது. 

கொடாரி நகரம் 

சுமை தூக்கும் பெண்கள் 

கொடாரியில் இருந்து ஹெலிகாப்டர் பயணம் 

முதல் ஹெலிகாப்டர் பயணிகள்


இரண்டாம் ஹெலிகாப்டர் பயணிகள்

பொதுவாகவே நேபாளத்தில் விமான விபத்துக்கள் அதிகம்.  மலை நாடு என்பதாலும் மழை பெய்யும் போது நிலச்சரிவுகள் ஏற்பட்டால்  அவசரமாக செல்ல விரும்புகின்றவர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் ஹெலிகாப்டர் மற்றும் சிறு விமானங்களை நாடுகின்றனர். ஆனால் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் இவர்கள் கொடுப்பதில்லை என்பதே உண்மை. இறைவன அருளால் அனைவரும் எந்த துன்பமும் இல்லாமல் காத்மாண்டு வந்து சேர்ந்தோம்.  

ஹெலிகாப்டரிலிருந்து  கிடைத்த அருமையான காட்சி

சிலர் நடந்தே வர முடிவு செய்தனர். திரும்பி வந்த போது பாதை ஒரளவு சரி செய்யப்பட்டிருந்தது. லாரிகள் மற்றும் ஜீப்புகள் ஓடின  எனவே அவர்களும் மாலை வரை காத்மாண்டு வந்தடைந்தனர்.

ஹெலிகாப்டரிலிருந்து காத்மாண்டு நகரம்

நன்றியுடன்  அடியேன் 

காத்மாண்டு வந்து சேர்ந்தோம் முதலில் செய்தது ஒரு குளியல்தான். அன்று மாலை பசுபதி நாதர் ஆலயம் சென்று சிவபெருமானுக்கு நன்றி தெரிவித்து விட்டு வந்தோம்.  மறு நாள் அங்கிருந்தே 108  திவ்ய தேசங்களில் ஒன்றான முக்திநாத் யாத்திரை  சென்றோம்.. 

இது வரை வந்து தரிசனம் செய்த அன்பர்கள் அனைவருக்கும் அந்த  .   சிவசக்தியின் அருள் சித்திக்க  அவர்கள் பாதம் இறைஞ்சுகின்றேன். இத்துடன் இந்த யாத்திரைக்கான பதிவுகள் இப்பதிவுடன் நிறைவடைகின்றன.  முக்திநாத் யாத்திரைப் பதிவுகள் இனி தொடரும். 

                                          மாணிக்கவாசகர் அருளிய கண்டபத்து  

அளவுஇலாப் பாவகத்தால் அழுக்குண்டு இங்கு அறிவின்றி 
இளைவுஒன்றும் அறியாதே வேறுவியனாய்க் கிடப்பேனுக்கு 
அளவு இலா ஆனந்தம் அளித்து என்னை ஆண்டானை
 களவு இலா வானவரும் தொழும் கயிலை(தில்லை) கண்டேனே! (8)

பாங்கினோது பரிசொன்றும் அறியாத நாயேனை
ஓங்கி ஊளத்து ஓளிவளர; உலப்புஇலா அன்பு அருளி
வாங்கிவினை மலம் அறித்து; வான்கருணை தந்தானை
நான்குமறை பயில்தில்லை(கயிலை) அம்பால்த்தே கண்டேனே (9)

பூதங்கள் ஐந்து ஆகிப் புலன் ஆகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனை
கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஓலியை மரகதத்தை
வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்குதில்லைக் கண்டேனே! (10)

ஓம் நமசிவாய 

Wednesday, January 07, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் -8


நைலத்திலிருந்து டோங்பா பயணம் 

திருக்கயிலாய யாத்திரையின் ஐந்தாம் நாள் காலை நைலத்தில் இருந்து  புறப்பட்டு  பல அரிய காட்சிகளை கண்டு களித்துக்கொண்டே பேருந்தில் பயணம் செய்து பழைய  டோங்பா அடைந்து அங்கு தங்கினோம். 

வழியில் ஓய்வெடுத்தோம் 

சீன அரசு ஒரு பேருந்தில் 18 யாத்திரிகள்தான் பயணம் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்திருந்தது போலவே மிக வேகமாக பேருந்தை ஓட்டக்கூடாது என்றும் கட்டுப்பாடி விதித்திருந்தது எனவே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இவ்வளவு நேரத்திற்கு அப்புறம்தான் செல்ல வேண்டியிருந்தது. வேகமாக சென்றால் வண்டி ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்படும் என்பதால் அவர்கள் பல இடங்களில் தேவையில்லாமல் பேருந்தை நிறுத்தினார்கள். அவ்வாறு நிறுத்திய ஒர் இடம்.   

திபெத்திய சிறுவன் 

அவ்வாறு வண்டி நின்றவுடன் அருகில் இருந்த ஒரு திபெத்திய கிராமத்தில் இருந்து ஒரு சிறுவன் வேக வேகமாக ஒடி வந்து பிச்சையெடுக்க ஆரம்பித்துவிட்டான். 

தூரத்தில் மலையடிவாரத்தில் புராதான திபெத்திய கிராமம் 

அரட்டையடிக்கும் திபெத்திய வண்டி ஓட்டுநர்கள் 

இன்றைய தினம் முதலில் லா லுங் லா என்ற 5100 மீ உயர  கணவாயை முதலில் கடந்தோம்,  ஆனால் அங்கு நிற்கவில்லை. பின்னர் உலகின் உச்சி என்று அழைக்கப்படும் பீடபூமியில் பயணம் செய்தோம், ஒரு பக்கம் நெடிதுயர்ந்த பனி மூடிய சிகரங்கள் கொண்ட மலைத்தொடர்,  மறு பக்கம் ஏரிகள்,  நடு நடுவே குறு கிராமங்கள் எங்காவது யாக் மற்றும் செம்மறி ஆட்டு மந்தைகள்  மேய்க்கும் திபெத்தியர்கள் என்று பலதரப்பட்ட  காட்சிகளை கண்டு  கொண்தே அருமையான தார் சாலையில் பயணம் செய்தோம். 

                           

இப்பாதை நட்புப்பாதை ( Friendship HIghway) என்றழைக்கப்படுகின்றது


பனி படர்ந்த மலைச் சிகரங்கள்


பாதையின் ஒரு புறம் சீ சா பாங் மா மலைத் தொடர்கள் எம்மை தொடர்ந்து வந்தன. அவற்றை யாம் கண்டு களித்தோம். யாம் பெற்ற இன்பம் இவ்வையகாத்தாரும் பெருக. சீனத்தின் இந்த பாலைவன மலங்காட்டில் ஏற்பட்டுள்ள முன்னேறத்தைக்கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. மின்சாரமும், தொலைத்தொடர்பும், சூரிய ஓளி விளக்குகளையும் வழியெங்கும் காணக்கிடைக்கின்றது. இதை பார்த்தால் நாம் இன்னும் பல் வருடங்கள் பின் தங்கியுள்ளோம் .


பைகூ சோ ஏரி


ஒரு பக்கம் மலைத்தொடர் மறு பக்கம் ஏரிகள் என்று கண்டோம். தாங்கள் காணும் ஏரி பைகு சோ ஏரி. இது ஒரு உப்பு நீர் ஏரி. பனி உருகி ஒடி வரும் நீரால் உருவானது.   பின்னர் சாகா என்னும் ஊரை நெருங்குவதற்கு முன்னர் பிரம்மாபுத்ரா நதியைக் கண்டோம், அதன் கரையில் வண்டிகளை நிறுத்தி மதிய உணவு உண்டோம். 

நெளிந்து வளைந்து செல்லும் நட்புப்பாதை 


சாகாவை நெருங்குவதற்கு முன்னர் பாதை இன்னும் பழைய மண்பாதையாகவே உள்ளது.   

பிரம்மபுத்ரா ஆறு 

 நதிக்கரையில்  நாங்கள் 

 குழுவினர் அனைவரும் 

பின் புலத்தில் சாகா நகரத்தைக் காண்கின்றீர்கள் அன்பர்களே. 

மதிய உணவை சுவைத்தோம்


இன்னும்  சில  பனிச்சிகரங்கள்

இவ்வாறு அருமையாக காட்சிகளை இரசித்துக்கொண்டே கடினமான மலைப்பாதையில் கடுங்குளிரில் பயணம் செய்து டாங்போவை அடைந்தோம். இங்கும் தற்போது கழிவறை வசதிகள் உள்ளன. இருவர் மட்டுமே தங்கக்கூடிய சுடு தண்ணீர் வசதி மற்றும் வெப்பக் கட்டுப்பாட்டுடன் கூடிய அறைகள் இங்கு உள்ளன. இருவர் அதிகப்படியாக 100 யுவான்கள் செலுத்தி இவ்வறையில் தங்கினர். 

                            
                                                              தங்கும் விடுதி

டாங்போ நகரம்

நைலம் நகரைப் போலவே இங்கும் கட்டிட வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன. இப்பகுதி மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு இதுவும் ஒரு அறிகுறி.


திட்டமிட்டபடி முழு நிலவன்று மானசரோவரின் கரையில் இருந்திருக்க வேண்டும் ஆனால் நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் ஒரு நாள் யாத்திரை தாமதம் ஆனது எனவே அடியோங்கள் டோங்பாவில் இருந்தோம். 

நிலவொளியில்  தங்கும் விடுதி 

பிரார்த்தணைக் கொடிகள்

இவ்வாறாக இன்றைய தின சுமார் 400 கி.மீ தூரப்பயணம் நன்றாக அமைந்தது 


எழில் பெறும் இமயத்து இயல்புடை அம்பொன்
பொதுதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு 
அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கு இனிது அருளினன்
ஒலிதரு  கைலை உயர்கிழவோனே! 

யாத்திரை தொடரும் . . . . . . . . .







Tuesday, May 14, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -11 (திருக்கயிலாய யாத்திரை-2012)

ஜாங்மூவிலிருந்து நைலாம் பயணம் 

ஜாங்மூவிலிருந்து நைலாம் செல்லும்  தார் சாலை
(தற்போது டார்ச்சன் வரை பாதை இது போல அருமையாக உள்ளது)


மறு நாள் காலை சூரிய உதயம் அருமையாக உதித்தது தன் செவ்வண்ணக் கதிர்களினால் சூரியன் அந்த ஜாங்மூ நகரத்தை தழுவும் அழகைக் கண்டு களித்தோம். பனி உருகி விட்டதால் நகரமெங்கும் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. மலைப்பிரதேசம் என்பதால் அடுக்கடுக்காக நெருக்கமாக வீடுகள் அமைந்துள்ளன. நகரின் நடுவே பெரும்பாதை செல்கின்றது. இன்றைய தினம் நைலாம் நகரில் தங்க வேண்டும் என்பதாலோ என்னவோ வண்டி ஓட்டுநர் தாமதமாக வந்தார்.

பாம்பு போல வளைந்து செல்லும் பாதை
வழியில் உள்ள ஒரு  சுரங்கப்பாதை

எனவே காலை உணவை முடித்து விட்டு நாங்கள் ஜாங்மூ நகரை சிறிது  சுற்றி வந்தோம். எல்லைப்புற நகரம் என்பதால் நகரம் முழுவதும் கடைகள் நேப்பாளத்தில் இருந்து வருபவர்கள் மொத்தமாக பொருட்களை வாங்கிக்கொண்டு செல்கின்றனர். பலதரப்பட்ட ஒப்பணை (Cosmetics) பொருட்கள் விற்கும் கடைகளைப் பார்த்தோம். இந்நகரில் ஒரு இந்துக் கோவிலும் உள்ளது. நகரத்தை சுற்றி வந்து அழகான குழந்தைகளை புகைப்படம் எடுத்துக்கொண்டு வண்டி ஓட்டுநர் வந்தவுடன் நைலாமிற்கு புறப்பட்டோம்.

                         


வழியில் ஒரு அருவி

வண்டியில் ஏறிய உடன் ஒரு பாட்டில் குடிநீர் அனைவருக்கும் வழங்கினர். முன்பே கூறியது போல பாதை இரட்டை வழி தார்ச் சாலை மலையிலிருந்து நிலச்சரிவு ஏற்பட்டாலும் அதை பாதையை அடைக்காதவாறு பல இடங்களில் தடுப்பு சுவர்களும் வலைகளும் அமைத்திருக்கின்றனர் மழைத் தண்ணீர் ஓடுவதற்காக கால்வாய்கள் அமைத்திருக்கின்றனர். பல்வேறு லாரிகள் நேபாளத்திற்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. ஆற்றின் ஓரமாகவே பாதை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இரு பக்கமும் பல பனி முடிய சிகரங்களை கண்ணுற்றோம். 

      
                                                               குளு குளு வண்டியில் எங்கள் குழுவினர்

ஒரு கொண்டை ஊசி வளைவு
********************************

சுந்தரர் தேவாரம்
நொடித்தான் மலை பதிகம்

திருக்கயிலாய மலையை  எம்பிரான் தோழர்  சுந்தரர் நொடித்தான்மலை என்று போற்றிப் பதிகம் பாடியுள்ளார்.  நமது துக்கங்களுக்கு காரணமான பாவங்களை நீக்குவதாலும (நொடித்தல்- அழித்தல்) அழித்தல் தொழிலை உடைய உருத்திரமூர்த்தி வீற்றிருந்தருளும் தலமாதலால்  நொடித்தான் மலை என்னும் பெயர் பெற்றது. 

  

சுந்தரர் வெள்ளை யானையில் திருக்கயிலாயம் சென்ற விழா திருமயிலையில் கொண்டாடப்படும் அழகை இங்கு சென்று படியுங்கள்



தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே
நானெனை பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்த யானை அருள் புரிந்து
ஊனுயிர் வேறு செய்தான் நொடித் தான்மலை உத்தமனே (1)

பொருள்: திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்த்ருளும் முதல்வன், தானே முன்பு என்னை நிலவுலகில் தோற்றுவித்தருளினான். தோற்றுவித்த அத்திருக்குறிப்பினையுணர்ந்து அவரது பொன் போலும் திருவடிகளுக்கு அந்தோ, எவ்வளவில் பாடல் செய்தேன்!  செய்யாதொழியவும், அப்புன்மை நோக்கி ஒழியாது , என்னை தன் அடியார்களுள் ஒருவனாக்  வைத்தெண்ணி, வானவர்களும் வந்து எதிர் கொள்ளுமாறு, பெரியதோர் வெள்ளை யானை ஊர்தியை எனக்கு அளித்து, எனது உடலொடு உயிரை உயர்வு பெறச் செய்தான்; அவன் திருவருள் இருந்தவாறு என்!


தேவாரம் முழுவதையும் படிக்க செல்லுங்கள் http://www.thevaaram.org/

                                                                                                    புனித யாத்திரை தொடரும்.  .   .   .