Showing posts with label ஜாங்மூ. Show all posts
Showing posts with label ஜாங்மூ. Show all posts

Friday, January 02, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் -7

நைலமில் ஒரு நாள் ஓய்வு


ஜாங்மூ நகரம்  நேபாளப் பகுதியிலிருந்து 

மறு நாள் காலையில் எந்தவித சிரமமும் இல்லாமல் எல்லையைக்  நட்புப் பாலம் வழியாகக் கடந்தோம். மூன்று பேருந்துகள் மூலம் நைலமை நோக்கிப் புறப்பட்டோம்.  இப்பகுதியிலும் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. எனவே வழியில் நிறைய அருவிகளைக் கண்டோம், நைலம் வரையிலும் மலை பசுமையாகவே இருந்தது. மேலே செல்ல செல்ல குளிர் அதிகமாகிக்கொண்டே சென்றது. நடுவில் ஜாங்மூவில் அனைவருக்கும் மதிய உணவு  பொட்டலம் வழங்கினர். அந்தி சாயும் நேரம் நைலம் அடைந்தோம். பின்னர் நைலம் நகரைச் சுற்றி வந்தோம்.     

கொடரி சீனப்பகுதியிலிருந்து 



நைலம் செல்லும் வழியில் சில அருவிகள் 


நைலத்தில் அடியோங்கள் தங்கிய விடுதி

2014ல் நைலம் மிகவும் மாறியிருந்தது.  அனைத்து தங்கும் விடுதிகளிலும் கழிவறைகள், கட்டண சுடு தண்ணீர் அறைகள், Wi-Fi வசதி, எல்லாம் வந்து விட்டது, பொதுக் கழிவறைகள்தான் ஆனால் தண்ணீர் வசதி இருந்தது. இது ஒரு நல்ல முன்னேற்றம்.  மேலை நாட்டினர் வந்து தங்கினால் என்ன என்ன வசதிகள் எதிர்பார்ப்பார்களோ அதெல்லாம் இப்போது நைலாமில் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ளன.  பலர் 15 யுவான்கள் கட்டி சுடு தண்ணீரில் குளித்தனர். காலை வெயில் இருக்கும் நேரத்தில் குளிப்பது உத்தமம். குளிராக இருக்கும் போது குளித்தால் சிலருக்கு சளிப்பிடித்துக்கொள்ளும். 

நைலம் நகரம் 



திகமான கடைகள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள்,  பல் பொருள் அங்காடிகள்(Super Markets) என்று பெருகிவிட்டன. பல கடைகளில் யாத்திரைக்கு வேண்டிய அனைத்து பொருள்களும்  கிட்டுகின்றன வேண்டும் பொருட்களை இங்கும் வாங்கிக்கொள்ளலாம். பலர் கைத்தடிகளை இங்கு நைலாமில் வாங்கினோம்.

 பயணம் செய்த  ஒரு பேருந்து 


நைலத்தில் இரவு பிரார்த்தணை


சிவ புராணம் பாராயணம் 

போற்றித்திருத்தாண்டகம் பாராயணம் 


பல அளவுகளில் அறைகள் இருந்தன. பொதுவாக ஒரு அறையில் ஆறு பேர் தங்கும் வண்ணம் கட்டில்கள் அமைந்திருந்தன. ஒரு அறையில் 13 பேர் தங்கும் அளவிற்கு பெரிதாக இருந்தது. அங்கு அனைவரும் கூடி பிரார்ரத்தனை செய்தோம்.  


ஓய்வு நாளில்  மலையேற்றப் பயிற்சி


மலையேற்றம்


மறு நாள் மலையேற்ற பயிற்சி செய்தோம். சரியாக தலைக்குத்தொப்பி மற்றும் கம்பளி உள்ளாடை அணியாமல்  மலையேறிய சிலருக்கு நாள் முழுவதும் பூச்சி ஊர்வது போன்ற ஒரு உணர்வு இருந்தது. எனவே சீனாவில் நுழைந்தவுடனே அனைத்து கம்பளி உடைகளையும் முறையாக அணிந்து கொள்ளுங்கள்.  


மலை உச்சியில்  








மலை மேலிருந்து நைலம் நகரம்

மலையில் மலர்ந்திருக்கும் ஒரு மலர் 

மலை இறக்கம் 

அதிகம் போக்குவரத்து இல்லாத பாதை 

மலையேறிய பின் சிறிது நேரம் ஒய்வு 


இரவு உறக்கம் ( ஆறு பேர் ஒரு அறையில்)

                                                                                                                           புனித யாத்திரை தொடரும் . . . . . . . . . 

Tuesday, May 14, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -11 (திருக்கயிலாய யாத்திரை-2012)

ஜாங்மூவிலிருந்து நைலாம் பயணம் 

ஜாங்மூவிலிருந்து நைலாம் செல்லும்  தார் சாலை
(தற்போது டார்ச்சன் வரை பாதை இது போல அருமையாக உள்ளது)


மறு நாள் காலை சூரிய உதயம் அருமையாக உதித்தது தன் செவ்வண்ணக் கதிர்களினால் சூரியன் அந்த ஜாங்மூ நகரத்தை தழுவும் அழகைக் கண்டு களித்தோம். பனி உருகி விட்டதால் நகரமெங்கும் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. மலைப்பிரதேசம் என்பதால் அடுக்கடுக்காக நெருக்கமாக வீடுகள் அமைந்துள்ளன. நகரின் நடுவே பெரும்பாதை செல்கின்றது. இன்றைய தினம் நைலாம் நகரில் தங்க வேண்டும் என்பதாலோ என்னவோ வண்டி ஓட்டுநர் தாமதமாக வந்தார்.

பாம்பு போல வளைந்து செல்லும் பாதை
வழியில் உள்ள ஒரு  சுரங்கப்பாதை

எனவே காலை உணவை முடித்து விட்டு நாங்கள் ஜாங்மூ நகரை சிறிது  சுற்றி வந்தோம். எல்லைப்புற நகரம் என்பதால் நகரம் முழுவதும் கடைகள் நேப்பாளத்தில் இருந்து வருபவர்கள் மொத்தமாக பொருட்களை வாங்கிக்கொண்டு செல்கின்றனர். பலதரப்பட்ட ஒப்பணை (Cosmetics) பொருட்கள் விற்கும் கடைகளைப் பார்த்தோம். இந்நகரில் ஒரு இந்துக் கோவிலும் உள்ளது. நகரத்தை சுற்றி வந்து அழகான குழந்தைகளை புகைப்படம் எடுத்துக்கொண்டு வண்டி ஓட்டுநர் வந்தவுடன் நைலாமிற்கு புறப்பட்டோம்.

                         


வழியில் ஒரு அருவி

வண்டியில் ஏறிய உடன் ஒரு பாட்டில் குடிநீர் அனைவருக்கும் வழங்கினர். முன்பே கூறியது போல பாதை இரட்டை வழி தார்ச் சாலை மலையிலிருந்து நிலச்சரிவு ஏற்பட்டாலும் அதை பாதையை அடைக்காதவாறு பல இடங்களில் தடுப்பு சுவர்களும் வலைகளும் அமைத்திருக்கின்றனர் மழைத் தண்ணீர் ஓடுவதற்காக கால்வாய்கள் அமைத்திருக்கின்றனர். பல்வேறு லாரிகள் நேபாளத்திற்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. ஆற்றின் ஓரமாகவே பாதை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இரு பக்கமும் பல பனி முடிய சிகரங்களை கண்ணுற்றோம். 

      
                                                               குளு குளு வண்டியில் எங்கள் குழுவினர்

ஒரு கொண்டை ஊசி வளைவு
********************************

சுந்தரர் தேவாரம்
நொடித்தான் மலை பதிகம்

திருக்கயிலாய மலையை  எம்பிரான் தோழர்  சுந்தரர் நொடித்தான்மலை என்று போற்றிப் பதிகம் பாடியுள்ளார்.  நமது துக்கங்களுக்கு காரணமான பாவங்களை நீக்குவதாலும (நொடித்தல்- அழித்தல்) அழித்தல் தொழிலை உடைய உருத்திரமூர்த்தி வீற்றிருந்தருளும் தலமாதலால்  நொடித்தான் மலை என்னும் பெயர் பெற்றது. 

  

சுந்தரர் வெள்ளை யானையில் திருக்கயிலாயம் சென்ற விழா திருமயிலையில் கொண்டாடப்படும் அழகை இங்கு சென்று படியுங்கள்



தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே
நானெனை பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்த யானை அருள் புரிந்து
ஊனுயிர் வேறு செய்தான் நொடித் தான்மலை உத்தமனே (1)

பொருள்: திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்த்ருளும் முதல்வன், தானே முன்பு என்னை நிலவுலகில் தோற்றுவித்தருளினான். தோற்றுவித்த அத்திருக்குறிப்பினையுணர்ந்து அவரது பொன் போலும் திருவடிகளுக்கு அந்தோ, எவ்வளவில் பாடல் செய்தேன்!  செய்யாதொழியவும், அப்புன்மை நோக்கி ஒழியாது , என்னை தன் அடியார்களுள் ஒருவனாக்  வைத்தெண்ணி, வானவர்களும் வந்து எதிர் கொள்ளுமாறு, பெரியதோர் வெள்ளை யானை ஊர்தியை எனக்கு அளித்து, எனது உடலொடு உயிரை உயர்வு பெறச் செய்தான்; அவன் திருவருள் இருந்தவாறு என்!


தேவாரம் முழுவதையும் படிக்க செல்லுங்கள் http://www.thevaaram.org/

                                                                                                    புனித யாத்திரை தொடரும்.  .   .   .   

Friday, May 10, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -10 (திருக்கயிலாய யாத்திரை-2012)


மூன்றாம் நாள் சீனாவில் நுழைதல் மற்றும் ஜாங்மூவில் தங்கல்  

சீனப் பகுதியில் மழையுடன் நுழைகின்றோம்



சிறிது நேரம் அந்தப் பக்கம் இருந்த கடைகளில் தங்கினோம். நேபாளப்பகுதியில் இந்திய ரூபாயை சீன யுவானாக மாற்றுவதை விட இந்தக் கடைகளில் மாற்றுவது நல்லது. சிறிது மழை மட்டுப்பட்டவுடன் மழை கோட்டை மாட்டிக்கொண்டு பேருந்து நிறுத்தி வைத்திருக்கும் இடத்திற்கு ஓடினோம். கிட்டதட்ட கி.மீ தூரம் மலையேற்ற பயிற்சி அனைவருக்கும் கிடைத்ததுபேருந்து செல்லும் வழியெங்கும் ஏகப்பட்ட லாரிகள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தன எனவே வண்டி எறும்பு போலத்தான் ஊர்ந்து சென்றது. ஆயினும் வண்டி ஒட்டுநர் எந்த வித சலிப்பும் இல்லாமல் பொறுமையாக ஒட்டிச்சென்றார். 


பேருந்துக்காக சிறு நடை பயணம் 
(திரு. தேபசிஸ் முகர்ஜி அவர்கள்)

வழியில்  சிறிது நேரம் ஓய்வு
(திரு கைலாஷ சந்திர கௌஷிக்)

 மலை மேல் ஜாங்மூ நகரம்

நாங்கள்  36 யாத்ரிகள் என்பதனால் ஒரு பேருந்து ஏற்பாடு செய்து தந்தார்கள் இல்லையென்றால் நான்கு யாத்திரிகள் ஒரு    Land Cruiser  என்னும் வாகனத்தில் சென்றிருக்க வேண்டும் அவ்வாறு சென்றிருந்தால் ரூபாய்  5000/- அதிகம் ஆயிருக்கும். Volvo வண்டி தருவதாக கூறியிருந்தார்கள் ஆனால் கொடுத்ததோ  HUGER வண்டி  இனி வரும் பத்து நாட்களுக்கு பயணம் இந்த வண்டியில்தான் பயணம்வண்டியில் குளு குளு வசதியுள்ளதுமேலும்    GPS வசதியும் உள்ளதுசீனாவில் வண்டிகள் எல்லாமே வலது கை ஓட்டமுடையவை ஆகவே பல தடவை வண்டியின் உள்ளே அமர்ந்திருக்கும் நமக்கு இவர் தவறான பக்கத்தில் செல்வது போல தோன்றியது.

ஜாங்மூ நகரின் ஒரு இந்து ஆலயம் 

 ஜாங்மூ  நகர ஹோட்டலில் பிரார்த்தனை

இவ்வாறு சுமார்  மணி நேரம் ஊர்ந்து சென்று ஜாங்மூ நகரின்((2,300 மீ/ 7,545 அடி)   ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றனர்.  திட்டமிட்டபடி இன்றே நைலாம் சென்றிருக்க வேண்டும் ஆனால் அங்கு ஹோட்டல்கள் எல்லாம் நிறைந்து விட்டதால் இங்கு தங்குகின்றோம் என்று கூறினார்கள் இங்கு ஹோட்டல் வாடகை குறைவு என்பதால் இங்கே தங்க வைத்தார்கள் என்பது பின்னால் புரிந்தது. இந்த ஒரு ஹோட்டலில்தான் முன் வாடகை 50 யுவான்கள் வசூலித்தனர் அறைகளை காலி செய்த போது திருப்பித் தந்து விட்டனர். இரண்டு பேர் தங்க வேண்டிய அறையில் மூன்று பேரை தங்க வைத்தனர்.


 ஜாங்மூ  நகரக்காட்சிகள் 


குறுகிய பாதை இருபுறமும் நெடிய கட்டிடங்கள் இதுதான் ஜாங்மூ

 ஒரு காய்கறிக்கடையில் நிஷா பாண்டே


அன்று அதிகாலையில் இருந்து அலைந்து கொண்டிருந்தோம் என்பதால் சிறிது நேரம் பஜனைப் பாடல்கள் பாடி சிவசக்தியை வணங்கி வீட்டு படுக்க சென்றோம்,. இந்த ஹோட்டலில்தான் சீனப்பகுதியில் கழிவறைகள் சரியாக இருந்தன இதற்கப்புறம் நல்ல கழிவறைகள் கிட்டவில்லைஇந்த ஒரு அம்சம் மட்டும் ஏழு வருடங்களுக்கு முன் நாங்கள் மேற்கொண்ட யாத்திரையின் போது எப்படி இருந்ததோ அப்படியேதான் உள்ளது  சீனப்பிரதேசத்தின் வளப்பிற்கும். நேபாளப் பகுதியின் ஏழ்மைக்கும் நடுவே போட்கோசி என்னும் நதி மட்டும்தான் உள்ளது. அது போல அப்பக்கம் பசுமை இப்பக்கம் வெறுமை.  அநேகமாக அனைத்து ஹோட்டல்களிலும் நாமே சமையல் செய்து கொள்ள அனுமதிக்கின்றனர் எனவே எங்களுடன் வநத சேர்ப்பாக்களே சமையல் செய்து உணவு பரிமாறுகின்றனர். அறை வாடகை மட்டுமே அவர்களுக்கு கொடுக்கின்றனர்.



காய்கறி நிறுக்கும் துலாக்கோலைப் பாருங்கள்

சீன மழலைகள்
 
(இறைவனின் படைப்புகளை படம் எடுக்கும் ஆர்வம் உள்ள திரு. சுந்தர் அவர்கள் கை வண்ணம்)


ஜாங்மூவிலிருந்து கொடாரி மற்றும் நேசப்பாலம்

ஜாங்மூ  ஹோட்டலில்  காலை சிற்றுண்டி



மறு நாள் காலை சூரிய உதயம் அருமையாக உதித்தது தன் செவ்வண்ணக் கதிர்களினால் சூரியன் அந்த ஜாங்மூ நகரத்தை தழுவும் அழகைக் கண்டு களித்தோம். பனி உருகி விட்டதால் நகரமெங்கும் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. மலைப்பிரதேசம் என்பதால் அடுக்கடுக்காக நெருக்கமாக வீடுகள் அமைந்துள்ளன. நகரின் நடுவே பெரும்பாதை செல்கின்றது. இன்றைய தினம் நைலாம் நகரில் தங்க வேண்டும் என்பதாலோ என்னவோ வண்டி ஓட்டுநர் தாமதமாக வந்தார். எனவே காலை உணவை முடித்து விட்டு நாங்கள் ஜாங்மூ நகரை சிறிது  சுற்றி வந்தோம்.

சீன வண்டி ஓட்டுநர்

எல்லைப்புற நகரம் என்பதால் நகரம் முழுவதும் கடைகள் நேப்பாளத்தில் இருந்து வருபவர்கள் மொத்தமாக பொருட்களை வாங்கிக்கொண்டு செல்கின்றனர். பலதரப்பட்ட ஒப்பணை (Cosmetics)  பொருட்கள் விற்கும் கடைகளையும் அழகு நிலையங்களையும் பார்த்தோம். இந்நகரில் ஒரு இந்துக் கோவிலும்  உள்ளது. நகரத்தை சுற்றி வந்து அழகான குழந்தைகளை புகைப்படம் எடுத்துக்கொண்டு வண்டி ஓட்டுநர் வந்தவுடன் நைலாமிற்கு புறப்பட்டோம்


சீன ஒப்பனைப் பொருட்கள்


ஜாங்மூ நகரை சுற்றிப்பார்க்கும் யக்யாங் பாண்டே, 
புனிதா பரத்வாஜ் மற்றும் உமா கோயல் அவர்கள்


 சீனப் பகுதியில் பயணம் செய்த பேருந்து


***************************

திருநாவுக்கரசர்  தேவாரம்

திருக்கயிலாயம்



கயிலை மலையை காவல் காக்கும்
அதிகார நந்தியில் திருமயிலை  கபாலீஸ்வரர்




கற்றனன் கயிலை தன்னைக் காண்டலு மரக்க னோடிச்
செற்றவ னெடுத்த வாறே சேயிழை யஞ்ச வீசன்

உற்றிறை யூன்றா முன்ன முணர்வழி வகையால் வீழ்ந்தான்

மற்றிறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே. (10)




பொருள் :சிவபெருமானுடய கயிலைமலையைக் கண்ட அளவில் இராவணன் வெகுண்டு ஓடிச் சென்று அதனை எடுத்த அளவில் பார்வதி அஞ்ச , எம் பெருமான் அவன் செயலை உள்ளத்துக் கொண்டு தன் விரலை ஊன்றிய மாத்திரத்தே அறிவு அழியும் நிலையில் இராவணன் விழுந்தான் . சற்று எம்பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மீண்டு அவன் உயிரோடு கண் விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்படாது போயிருக்கும் .



தேவாரம் முழுவதையும் படிக்க செல்லுங்கள் http://www.thevaaram.org/

                                                                                                    புனித யாத்திரை தொடரும்.  .   .   .