Saturday, February 28, 2009

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய தரிசனம்) -32

நேபாளம் மூலமாக செல்பவர்கள் அனுபவம் -3

விமானத்திலிருந்து இமய மலையின் அற்புத காட்சி-1

எங்கள் யாத்திரையினருக்கு கிடைக்காத, இவர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு, பௌர்ணமியன்று மானசரோவரின் அந்த அற்புத அழகைக் கண்டு களிக்கும் வாய்ப்பு, ஆம் இவர்கள் ஹோர்ச்சு முகாமில் தங்கிய நாள் பௌர்ணமி நாள். பூர்ண சந்திரனின் அமுத ஒளியில் மானசரோவரின் அழகை வர்க்க வார்த்தைகளே இல்லை என்றார் என் நண்பர். அரசு நடத்தும் யாத்திரையில் ஆறு நாட்களுக்கு ஒரு குழு கிளம்புவதால், அனைவருக்கும் பௌர்ணமி தரிசனம் கிடைப்பதில்லை, ஆனால் தனியார் நிறுவனத்தினர் நடத்தும் இந்த யாத்திரை அனேகமாக பௌர்ணமியன்று மானசரோவரில் இருப்பது போல் தான் நடத்தப்படுகின்றது.


பன்னிரெண்டாம் நாள் காலையில் மானசரோவர் கரையில் பூஜைகளை முடித்துக் கொண்டு அதிகமாக தங்காமல் , பரியாங் , சாகா வழியாக ஒரு நாள் முன்னதாகவே காத்மாண்டுவை அடைந்தார்களாம். கிடைத்த அந்த ஒரு நாளில் காத்மாண்டுவிலிருந்து விமானம் மூலம் மலை தரிசனம் காண சென்றார்களாம். அட்டவனைப்படி பன்னிரண்டாம் நாள் 277 கி மீ மானசரோவரிலிருந்து ப்ரியாங் பயணம். பதிமூன்றாம் நாள் பரியாங்கிலிருந்து சாகா 185 கி. மீ பயணம், பதினான்காம் நாள் சாகாவிலிருந்து நைலாமூ அல்லது ஜாங்மூ பயணம் சுமார் 300 கி .மீ பயணம். பதினைந்தாம் நாள் காத்மாண்டு திரும்ப அடைதல்.


கௌரி சங்கர் சிகரங்கள்


கிடைத்த ஒரு நாளில் இமய மலையின் சிகரங்களை கண்டு களித்தார்களாம். எவரெஸ்ட் சிகரம், கௌரி சங்கர் சிகரம் கஞ்சன் ஜங்கா சிகரம் ஆகியவற்றை விமானத்திலிருந்து கண்டு களித்தார்களாம். பின் வெற்றிகரமாக யாத்திரை முடித்த மகிழ்ச்சியுடன் தாய் நாடு திரும்பினார். செல்லும் போது பனி அதிகமாக இருந்தால் வெறும் அஷ்டபத் வரை சென்று தரிசனம் செய்து விட்டு வந்து விட வேண்டியதுதான் என்று தான் சென்றார் என் நண்பர் ஆனால் ப்ரிக்கிரமாவும் முடித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.


இரண்டு வழிகளிலும் இயற்கை žற்றங்களை சந்திக்க வேண்டியுள்ளது. சாதக பாதகங்கள் உள்ளன. ஆனால் நாம் எவ்வாறு வர வேண்டும் எப்போது வர வேண்டும், எந்த தரிசனம் பெற வேண்டும் என்பதை அந்த ப்ரபஞ்ச நாயகரே முடிவு செய்வதால் நமது கையில் எதுவும் இல்லை என்பது மட்டுமே உண்மை. எனவே உனது தரிசனம் தா என்று வேண்டுவதே நாம் செய்யக்கூடிய ஒரே செயல் மற்றவற்றை அவர் கவனித்து கொள்கின்றார்.


இனி நேபாள் வழியாக செல்லும் போது ஆகும் செலவு. ரூபாய் 59000/- காத்மாண்டுவிலிருந்து காத்மாண்டு வரை. இதில் செல்லும் போது இரு நாள் காத்மாண்டுவில் தங்கும் செலவு, சுற்றுலா, ஜ“ப் கட்டணம், உணவு, தங்கும் செலவு, ஒரு கேன் மானசரோவர் தீர்த்தம், வரும் போது காத்மாண்டுவில் தங்கும் செலவு ஆகியவை அடங்கும். சென்னையிலிருந்து காத்மாண்டு செல்லும் கட்டணம் நம்முடையது. போர்ட்டர் , குதிரை மற்ற பொருட்கள் சுமார் 15000/-. காத்மாண்டுவிலிருந்து அரை நாள் இமய மலை தரிசனத்திற்கு ரூபாய் 3500/- ஆக மொத்தம் சுமார் சுமார் 75000/- செலவாகும்.


விமானத்திலிருந்து இமய மலையின் அற்புத காட்சி-2


இத்துடன் இந்தியா வழியாக செல்லும் யாத்திரை பற்றி விரிவாகவும், நேபாளம் வழியாக செல்லும் யாத்திரைபற்றி சுருக்கமாகவும் கண்டீர்கள். கடந்த நான்கு வருடங்களாக சென்று வருபவர்கள் பல பேருடன் பேசியதில் ஒவ்வொருவரின் அனுபவும் ஒவ்வொரு விதமாகவே உள்ளது, ஆகவே அனைத்தையும் கூறுவது என்பது நிச்சயம் முடியாது , ஆயினும் இதுவரை கூறியவை நிச்சயம் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று அடியேன் நம்புகிறேன்.


இனி அடுத்த பதிவில் யாத்திரை சம்பந்தமான சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டு அந்த சிவசக்தியின் அருளால் இத்தொடர் நிறைவடையும். அதற்குப் பின்னரும் தரிசனம் தொடர்ந்து கொண்டிருக்கும் அவர்கள் அருளால்.


திருசிற்றம்பலம்


**************

Please also visit

" picasaweb.google.com/jeyceebee
"

for more photos of the yatra.

Wednesday, February 25, 2009

Kailash Manasarovar darshan (yatra) - 31

Kailash Manasarovar Yatra via Nepal - 2

Vamadeva face of the Lord

On the seventh day they reached Hore and had the first darshan of the blue throated, trident weiding, snake bejeweled, Dancing Lord’s, south face. Then they traveled upto Qihu and stayed there in camps established for them. The camp was established using double decker tents and it has insulated walls and they were provided with mattresses and a sleeping bag and they slept inside that sleeping bag.

On the eight day they took the Holy dip in Manasarovar and did puja and traveled via Horchu to the base camp at Darchen, .


Akoram Face of the Lord

On the Ninth day out of the 44 yatris only 10 lucky ones undertook the Holy parikrama of Kailash. One thing should be mentioned here these private operators normally discourage yatris so that they do not undertake the parikrama. Another yatri whom I met had travelled twice through Nepal and he could not do the parikrama both the times and he applied for the yatra through India for parikrama. Some tour operators just show the video of parikrama and tell the journey is very tough and risky and discourage the yatris, some of the yatris who may be sick also stay back at Darchen still those who undertake the parikrama till they return. About 12 yatris who didn’t undertook the parikrama wanted to leave early but as only group visa was issued they paid lot of fine and then only they were allowed to leave China. Some eight yatris in their group stayed at Horchu camp not at Darchen still these lucky ten completed the parikrama.

Now let us see about the experiences of my friend during parikrama, out of the ten 8 trekked and two engaged ponies. On the first day there was no problem and they reached Deraphuk after having the darshan of Aghor (south) and Sathyojat (west) face.

Gowri Kund

At Deraphuk they set up their own camp and stayed there. As already told they were provided with packed lunch. They also stayed at the feet of the Vamadeva (North) face of the Lord.

On the tenth day they also left early as they have to cross Dolma pass that day, those who trek left early leaving the two behind, but the pony keeper did not appear, though he was engaged for the full parikrama and was also paid the full amount in advance , then my friend and his companion who were left in lurch, started trekking but luckily by the Grace of the Lord one boy came with two ponies and my friend engaged him by paying money to him, in between they met the old pony man but he refused that he was engaged the earlier day. Our experience was the same as language is a problem and we communicate by sign language only we feel cheated by these men because they do not listen to what we tell and most of the time they make us trek. Also since one pony handler handles around five ponies we have to travel on our own only. But by the grace of Shiv sakthi all the ten yatris reached Dolma had a nice darshan of Mother Parvati and Gauri Kund as my friend traveled in April Gauri Kund was still half frozen. As the weather was not clear they could stay there in Dolma just for 10 minutes had the darshan of Mother and her bathing ghat took some snaps and they descended down immediately.


At Dolma Pass

After successful crossing of Dolma Pass they returned back to Jhtulphuk camp for the second day’s night stay and returned back to Horchu camp directly after about three hours of trek on the third day. As they didn’t return to Darchen camp they didn’t get to chance to go to Astapath also. As they passed via Horchu on way to Kailash parikrama and returned to the same place they completed the parikrama of Manasarovar also.

******************

Kailashi ji. I was part of the 7th batch in 2007 - 7th July to 31st July 2007. I have posted some photos at

picasaweb.google.com/jeyceebee

You can check this and may pass on the link to fellow yatris.

Shri Jagdish has left a comment as given above, the photos and the description are divine, I request all of you to visit his picasa album alson and enahnce your divine experience.

Tuesday, February 24, 2009

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய தரிசனம்) -31

நேபாளம் மூலமாக செல்பவர்கள் அனுபவம் -2

இராக்ஷஸ் தாலிலிருந்து திருக்கயிலாய தரிசனம்

*********


அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்
திருக்கயிலாயம்

போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி

புண்ணியனே நண்ண லரியாய் போற்றி

எற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி

எண்ணா யிர நூறு பெயராய் போற்றி

நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி

நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி

காற்றிசைக்குந் திசையெல்லாம் வித்தே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி


திருச்சிற்றம்பலம்


* * * * * * *


ஏழாம் நாள் மானசரோவரின் கரையில் உள்ள ஹோரேவை அடைந்து அங்கிருந்து குஹூ அடைந்து அங்கு கூடாரமடித்து தங்கினார்களாம். கூடாரம் இரட்டை அடுக்குகள் கொண்டது, உள்ளே குளிர் தெரிவதில்லை. அதே சமயம் காற்றோட்டமாகவும் இருந்தது, கீழே விரித்துக் கொள்ள ஒரு மெத்தை வழங்குகின்றனர் அதன் மேல் தூங்கும் பைகளில் தூங்கினோம் என்று கூறினார். கூடாரத்தை சுற்றுலா நிறுவனத்தினரே வழங்குகின்றனர், அமைக்கின்றனர். ஹோரோவிலிருந்து தக்ஷி்ணாமூர்த்தியை, சம்போ சங்கர உமாபதியை, சாம்பசுந்தர பசுபதியை, நந்தி வாஹணரை, நாக பூஷணரை, சந்திர சேகரை, ஜடாதரரை, கங்காதரரை, கௌரி மனோஹரரை, கிரிஜா காந்தரை, சதா சிவரை தரிசித்து வணங்கினார்களாம். இவர்களுக்கும் முதலில் தரிசனம் தரும் முகம் தெற்கு முகம் தான்.


மானசரோவரில் புனித நீராடல்


எட்டாம் நாள் குஹூவில் மானசரோவரில் நீராடி காலை பூஜையை முடித்துக் கொண்டு ஹோர்ச்சு (Horchu) வழியாக டார்ச்சென் ஆதார முகாமை அடைந்தார்களாம். இவர்கள் குழுவில் 12 பேர் அங்கிருந்து கைலாய தரிசனத்தை முடித்துக் கொண்டு டார்ச்சனில் இருந்தே கைலாசவாசரின், கனக சபேசரின், சுந்தர குஞ்சித நடராஜரின், ஸ்மசான வாசரின், சிதம்பரேசரின் தரிசனத்தை முடித்துக் கொண்டு உடனே தாய் நாடு திரும்பி வந்து விட்டனராம். குழு விசா பெற்றிருந்ததால் இவர்கள் மட்டும் žக்கிரமாக திரும்பி வந்ததனால் இவர்கள் அனைவரும் அபராத கட்டணம் கட்டிய பிறகே žனாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்களாம். மேலும் 8 பேர் பரிக்கிரமாவை மேற்கொள்ளாமல் டார்ச்சென்னிலேயே தங்கி விட்டார்களாம். அவர்களை அடுத்த நாள் ஹோர்ச்சு முகாமிற்கு அழைத்து சென்று விட்டார்களாம். இங்கு ஒன்றை கூற வேண்டும், அரசு நடத்தும் யாத்திரையில் செல்லும் போது யாரையும் திருப்பி அனுப்ப L.O முயற்சி செய்வதில்லை, ஏதாவது சுகவீனம் ஏற்பட்டால் அவர்களாகவே திரும்பி வர ஏற்பாடு செய்யப்படுகின்றது. ஆனால் நேபாள் வழியாக செல்லும் யாத்திரையில் மருத்துவ பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை, மேலும் யாத்திரிகளை பரிக்கிரமா செய்வதிலிருந்து தடுக்க முயற்சி செய்கின்றனர் என்பது உண்மையையே என்று என் நண்பரும் உறுதி படுத்தினார். பரிக்கிரமா மிகவும் கடினமானது, தாங்கள் தங்கள் விருப்பப்படிதான் செல்கின்றீர்கள் என்று கூறி, விருப்பபட்டவர்களை மட்டும் தான் பரிக்கிரமாவிற்கு அனுப்பினார்களாம். ஆனால் நாம் செலுத்திய பணத்தில் எதையும் திருப்பித்தருவது இல்லையாம். அதே சமயம் உடல் நலம் காரணமாக நடைப்பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் அந்த தேவ பூமியை ஸ்பர்சிக்க வேண்டும் அந்த தேஜோரூபரின், ஜோதிப்பிரகாசரின், விபூதி சுந்தர விஸ்வேச்வரரின் , வ்ருஷபாரூடரின், வாம தேவரின், பார்வதி ரமணரின்,பரமேசரின் ஒரு தரிசனம் மட்டும் போதும் என்று நினைப்பவர்களுக்கு இந்த வழியாக செல்லும் யாத்திரை ஒரு வரப்பிரசாதம்.


வடக்கு முக தரிசனம்

ஒன்பதாம் நாள் 10 பேர் மட்டுமே பரிக்கிரமாவிற்கு சென்றனர். இவர்கள் பரிக்கிரமா செல்லும் வழியும் அடியேன் சென்ற வழிதான் ஆனால் இவர்கள் தங்குவது இவர்களுடைய கூடாரத்தில், முதல் நாள் இரவு டேராபுக்கில் தான் தங்கினார்களாம். இரண்டாம் நாள் காலை வடக்கு முகத்தில் சிவ சக்தியை, சூலாதரியை, த்ரிமூர்த்தியை, வ்யோம கேசரை, சர்வேசரை, ஸ்வயம்ப்ரகாசரை, சொர்ண பூரீசரை, சொர்ணாம்பிகையின் பிராணேசரை தரிசித்த ஆனந்தத்துடன் மிகவும் கடினமான யாத்திரையை தொடங்கினார்களாம். குதிரைக்காரர்களால் பெரும் துன்பம் ஏற்பட்டிருக்கின்றது முதல் நாளே மூன்று நாட்களுக்கும் வாடகை பேசி முன் பணமாக 300 யுவானும் தந்திருக்கின்றார். ஆனால் இரண்டாம் நாள் குதிரைக்காரன் வரவே இல்லையாம் , நடைபயணமாகவே செல்பவர்களும் முதலிலேயே சென்று விட்டார்களாம். இவர்கள் இரண்டு பேர் மட்டும் தனியே நிர்கதியாக நின்றார்களாம், நடப்பது நடக்கட்டும், நடந்தே செல்லலாம் என்று இவர்கள் நடக்க ஆரம்பித்த போது ஒரு சிறுவன் இரண்டு குதிரைகளுடன் வந்து போனி வேண்டுமா என்று கேட்டுக்கொண்டு வந்தது தெய்வ செயல்தான் என்று கூறினார். பின் டோல்மாவை அடைந்த போது பழைய குதிரைக்காரன் வந்தானாம் ஆனால் இவரை பார்த்ததே இல்லை என்று கூறினானாம். எனவே žனப்பகுதியில் குதிரைக்காரரை வாடகைக்கு அமர்த்தும் போது உங்கள் சேர்பா அல்லது வழிகாட்டியை கலந்து கொண்டு செய்யவும் ஏனென்றால் அவர்களுக்கு குதிரைகாரர் பாஷையும் தெரியும் எதாவது பிரச்சினை வந்தாலும் தீர்த்துக் கொள்வது சுலபம். இதை அடியேன் நண்பர் அவசியம் எழுதுமாறு கூறினார்.


அடி அளந்து கும்பிட்டு கோரா ( கிரி வலம்) செய்யும் திபெத்திய பெண்கள்

இவர்கள் சென்ற சமயம் பனி அதிகமாக இருந்ததால் டோல்மாவில் அதிக நேரம் தங்க முடியவில்லையாம், பார்வதி தேவியை, கௌரியை, சந்திர சடாதரியை, முகுந்த சோதரியை, த்ய கல்யாயை, சாம்பவியை, கிரி கன்னியை, மனதார வணங்கி விட்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டு உடனே கீழே இறங்கி விட்டார்களாம். கௌரி குளம் இன்னும் உறைந்து காணப்பட்டது, மலை முகட்டில் இன்னும் பனி இருந்ததாம். பின் அன்று ஜுடுல்புக் (Jhutulpuk) என்ற இடத்தில் முகாமிட்டு தங்கினார்களாம். ஜுடுல்புக் என்றால் அதிசய குகை என்று அர்த்தமாம். இங்கு புத்த பிக்ஷ” மில் ரெபா அதிசயங்கள் செய்திருக்கின்றாராம். இவர்கள் தங்கியிருந்த போது அங்கு பனிப்பொழிவு இருந்ததாம்.


கூடாரமடித்து அதில் தங்குகின்றனர்

யாத்திரையின் பதினொன்றாம் நாள் அங்குகிருந்தே யாத்திரையின் பதினொன்றாம் நாள் சுமார் மூன்று மணி நேர நடைப்பயணத்திற்குப்பின் வண்டிகளில் மானசரோவரின் கரையில் உள்ள ஹோர்ச்சு முகாமிற்கு திரும்பினார்களாம். இவ்வாறு செல்லும் வழியில் ஹோர்ச்சு வழியாக சென்று பின் திரும்பி வரும்போது ஹோர்ச்சு அடைந்ததால் மானசரோவர் கிரி வலமும் முடிந்தாம். இவர்கள் திரும்பி டார்ச்சென் செல்லவில்லை எனவே அஷ்டபத் செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை என்றார்.


நேபாள் வழி யாத்திரை இன்னும் தொடரும்........



*********

Om Namah Shivay

Kailashi ji.

I was part of the 7th batch in 2007 - 7th July to 31st July 2007.

I have posted some photos at

picasaweb.google.com/jeyceebee



You can check this and may pass on the link to fellow yatris.

இப்பதிவுகளை கண்ட ஒரு அன்பர் ஜகதீஸ் அவர்கள் தாம் சென்ற யாத்திரையின் புகைப்படங்களை பிகாசோவில் இட்டிருப்பதை கூறினார் அவ்விடமும் சென்று தரிசனம் பெற வேண்டுகிறேன்.