Showing posts with label குர்லா மாந்தாதா மலை. Show all posts
Showing posts with label குர்லா மாந்தாதா மலை. Show all posts

Sunday, April 12, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 24

டார்ச்செனில் இருந்து டோக்சென் திரும்பும் போது கிடைத்த தரிசனம் 

அதிகாலை நேரத்தில் டார்ச்சன்

பொன்னார் மேனியன் தரிசனம் 

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
 மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைகேனே
  


கிட்டப்பார்வையில் ( Close-up) ஐயனின் தெற்கு திருமுகம்
மேகப்போர்வையுடன் 

மலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரை திவ்யமாக வலம் வந்த அடியோங்கள் டார்ச்சன் திரும்பிய போது மற்ற யாத்திரிகள் தயாராக இருந்தனர். மதிய உணவை முடித்துக்கொண்டு  பேருந்தில் கிளம்பினோம்.   


மேகம் இல்லாமல் 

டார்ச்செனில் இருந்து பார்க்கும் பொழுது தெற்கு முகத்தின் மேல் பகுதி மட்டுமே தெரியும் இதுவரை அந்த காட்சிகளைக் கண்டீர்கள். இனி டார்ச்செனில் இருந்து டோக்சென் செல்லும் போது கிடைத்த அருமையான தரிசனத்தைக் காணலாம். 


டோக்செனில் இருந்து டார்ர்ச்சென் சென்ற போது எப்படி ஐயனின் திவ்ய தரிசனம் கிட்டியதோ அதே போல திரும்பும் போது தரிசனம் கிட்டியது. நடு நடுவே மேகம் வந்து ஐயனை மறைத்துக்கொண்டது ஐயன் எங்களுடன் கண்ணாமூச்சி ஆடுவது போல இருந்தது. 

தெற்கு முகம் மற்றும் கிழக்கு முகத்தின் நீட்சி 

முழு முக தரிசனம் 






பேருந்தில் ஐயனை பார்த்து திரும்பி அமர்ந்து கொண்டு இந்த அற்புத காட்சிகளை கண்டு கொண்டே வந்தோம். 


கிழக்கு முகத்துடன்  


டோக்சென்னை நெருங்க நெருங்க ஐயனிடமிருந்து விலகி மானசரோவர் அருகில் வந்து சேர்ந்தோம். 

 குர்லா மாந்தாதா மலைத்தொடர் மற்றும் மானசரோவர் ஏரி  



நிறைவாக டோக்சென் வந்து சேர்ந்தோம். நிறைவாக அருமையான தரிசனம் தந்த சிவசக்திக்கு ஆனந்தத்துடன்  அனைவரும் ஒன்றாக கூடி நின்று சிவபுராணம்   பாடி அடி வீழ்ந்து வணங்கி இல்லம் நோக்கி புறப்பட்டோம்.  


டோக்செனில் உள்ள  காரியாலய கட்டிடம் 



கிரி வலம் முடித்த எழுவர் 






சிவபுராணம் பாடுகின்றோம் 

நீங்கள் காணும் நீல நிற பேருந்தில்தான் மானசரோவரில் இருந்து திருக்க்யிலாயம் சென்று திரும்பி வந்தோம். இனி எப்போது ஐயன் அழைப்பார் அவரை தரிசிப்போம் என்பது தெரியாததால் அந்த தரிசனத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டோம். மொத்தமாக பார்த்தால் இந்த யாத்திரை மிகவும் அருமையாக அமைந்தது. ஒரே ஒரு சிறு குறை அஷ்டபத் சென்று ஐயனை அருகாமையில் தரிசனம் செய்ய முடியவில்லை, சீன அரசு தற்போது அஷ்டபத் செல்ல அனுமதிப்பதில்லை என்று கூறினார்கள். சிவசக்திக்கு நன்றி கூறி பின்னர் நாங்கள் சென்ற பேருந்திற்கு மாறி  புது டாங்போ நோக்கி புறப்பட்டோம்.

மாணிக்கவாசகர் அருளிய கண்டபத்து  

பத்திமையும் பரிசும் இலாப் பசுபாசம் அறுத்து அருளி
பித்தன்இவன் எனஎன்னை ஆக்குவித்து பேராமே
சித்தமெனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்குதில்லைக் (கயிலை) கண்டேனே! (7)


Wednesday, August 14, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -40 (திருக்கயிலாய யாத்திரை-2012)

மூன்றாம் நாள் கிரி வலம் 

மூன்றாள் நாள் கிரி வலத்தை துவக்குகின்றோம்

கிரி வலத்தின் போது அமீத் அஹர்வால்

                                                              கிரி வலத்தின் போது நிஷ்டா பாண்டே

சீரான பாதை  வெயிலாகவும் இருந்தது 

ஜாங் ஜெர்பூ ஆற்றின் இரு கரையிலும் வாகனம் செல்லும் வகையில்
 பாதைகள் தயார் ஆகிக் கொண்டுள்ளன


கிரிவலப்பாதையிலிருந்து குர்லா மாந்தாதா  மலைச் சிகரம்






பிரார்த்தனை ஸ்தலம்



எங்கள் குழுவினர்



கருட தரிசனம் 

 சிலர் குதிரையில் பயணம் செய்தனர்

 அஜய் கௌசிக்


திபெத்திய குழந்தை - தாய்


கோரா வரும் திபெத்தியப் பெண்

 முதலில் மண்டியிடுகிறார்


பின்னர் சாஷ்டாங்க நமஸ்காரம்



இறுதியில் அஷ்டாங்க நமஸ்காரம் 

இப்படியே  முழு கிரி வலப் பாதையும் அடி விழுந்து கும்பிட்டு கோராவை முடிக்கின்றனர்.


10ம் நாள் கிரி வலம் முடித்து சாகா வரை பேருந்து  பயணம் (580 கி.மீ)

மறு நாள் காலை எப்போதும் போல் எழுந்து காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு கிரி வலத்தை முடிக்க கிளம்பியபோதுதான் தெரிந்தது  வலது முழங்காலை நகர்த்த முடியவில்லை என்று, எப்படியாவது சென்று விடலாம் என்று சிறிது தூரம் நடக்க முயற்சி செய்தேன் முடியவில்லை. வேறு வழியில்லை குதிரையில்தான் செல்ல முடியும் என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு நின்ற போது இரு குதிரைக்காரர்கள் கண்ணில் பட்டனர். ட்ராங்டோ வருகின்றீர்களா? என்று கேட்க 100 யுவான்களுக்கு வர சம்மதித்தனர். இவ்வாறாக கிரி வலத்தின் மூன்றாம் நாளும் குதிரையில் பயணம் செய்யும்படி ஆனது. வரும் வழியில்  திவ்யமாக மானசரோவர் மற்றும் குர்லா மாந்தாதா மலைச் சிகரங்களின் தரிசனம் கிட்டியது. மூன்று நாள் கிரி வலத்திலும் இன்றைய தினம்தான் மிகவும் சுலபமானது. பாதையும் சமவெளியில் உள்ளது, ஒரி சிறிதளவுதான் ஏற்ற இறக்கம், நன்றாக வெயில் அடித்தது. யாருக்கும் எந்தவித சிரமமும் இருக்கவில்லை.

கருப்புக் கண்ணாடி அணியாமல் பனிப்பகுதியில்  யாத்திரை செய்த எங்கள் குழுவைச் சார்ந்த திரு.முகர்ஜி அவர்களுக்கு கண்கள் சிவந்து விட்டது கன்னமெல்லாம் கன்னிப் போய் ரோஜா நிறம் ஆகிவிட்டது. எங்களிடம் இருந்த கண் மருந்து போட்டோம். ஆகவே அவசியம் புறஊதா கதிர்களை தடுக்கக்கூடிய கருப்புக் கண்ணாடி எடுத்துச்சென்று பயன்படுத்துங்கள்.  பின்னர் அனைவரும் மதியம் சுமார் 12 மணியளவில் ட்ருங்டோ (Trungto) வந்து சேர்ந்தோம். எந்த குறையும் இல்லாமல் அருமையான தரிசனம், மற்றும் கிரி வலத்தை  முடிக்க அருள் புரிந்ததற்காக முக்கண் முதல்வருக்கும், அன்னை மலை மகளுக்கும் நன்றி கூறினோம்.   பின்னர் எங்களுக்காக அங்குக்  காத்துக்கொண்டிருந்த பேருந்தில் ஏறி டார்ச்சன் வந்தடைந்தோம்.






Saturday, June 08, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -22 (திருக்கயிலாய யாத்திரை-2012)

முக்கண் முதல்வரின் முதல் தரிசனம் 


ஹோரேவை நெருங்கும் போது முதல்  தரிசனம் 

அம்மையப்பரின் அற்புத தரிசனம்


ஐயனைக் கண்ட ஆனந்தத்தில் பறவை போல் பறந்தோம்
ஆனந்தக் கூத்தாடினோம்

அடி விழுந்து வணங்கினோம்

நின்றும்  கிடந்தும்  இருந்தும் வணங்கினோம் 
( C.K. வைஷ்ணவ் தம்பதிகள்)

ஆனந்தக் கண்ணீர் வடித்தோம்

(பின் புலத்தில் குர்லா மாந்தாதா மலைச் சிகரங்களையும்,
 மானசரோவர் ஏரியையும் காண்கிறீர்கள்)


அன்னபூரணி அன்னமும் பாலித்தாள்

(சேர்பா ரஞ்சித்,  சுதார்,  சேர்பா சோனம்
எடி அகர்வால், ஸ்வாதி அகர்வால்)

சகோதர சகோதரி யயாங் பாண்டே மற்றும்
 நிஷ்டா பாண்டே ஸ்வாதி அவர்களுடன்

குடும்பம் குடும்பமாக வணங்கினார்கள்
(ரமன், சதிஷ், கைலாஷ் கௌசிக்)

தம்பதிகளாக சேவித்தார்கள்
விஜய் குமார்- ரஷ்மி மஹாஜன்

பறவைகளுக்கு அன்னம் பாலித்தோம் 


அனைவரும் ஒன்றாக கூடி கிரிவலமும் சித்திக்க வேண்டும் 
என்று மனதார இறைஞ்சினோம்

ஆனந்தத்தில்  வானத்தில் மிதந்தோம்

பேருந்தின் முன்னர் நிஷ்டா பாண்டே,
 அமீத் அஹர்வால்
கட்டிட வேலைகள் நடைபெறுகின்றன 
இவ்வாறு   மலை பாலைவனத்தில்  பயணம் செய்து மாயும் லா கணவாயைக் (5200 மீ) கடந்து  மதிய வேளைக்கு மானசரோவரின் வட கரையில் உள்ள ஹோரே (Hore) திபெத்தில் ஹோர்ச்சூ என்னும் கிராமத்திற்கு வந்தோம். ஹோரேவை நெருங்கும் போதே ஐயனின்  முதல் தரிசனம் கிட்டியது அனைவருக்கும் ஐயனின் தரிசனம் பாருங்கள் என்று கூறினோம். மேக மூட்டம் எங்கும் இல்லை வானம் நிர்மலமாக இருந்தது, ஆனால் பனி காற்றில் இருந்ததால் சூரிய ஒளி பிரகாசமாக இல்லாததால், மங்கலாக இருந்தது. எதற்காக இவ்வளவு சிரமம் எடுத்து வந்தோமோ அந்த எண்ணம் அவனருளால் நிறைவேறியது. ஆம் அந்த முக்கண் முதல்வரின் முதல் தரிசனம் திவ்யமாக கிட்டியது. 

முதலில் தரிசனம் தந்த அம்மையப்பருக்கு அடி வீழ்ந்து வணக்கம் செய்தோம். ஆனந்தக் கூத்தாடினோம், அப்படியே பறவைகள் போல வானத்தில் மிதந்தோம். ஆனந்த கண்ணீர் வடித்தோம். நின்றும் இடந்தும் கிடந்தும் அமையப்பரை  வணங்கி நன்றி செலுத்தினோம். அந்த ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. சென்ற  தடவை அடியேன் யாத்திரை செய்த போது இருந்த ஒரே குறையான முதல் தரிசனத்தை இந்த யாத்திரையின் போது தந்தருளிய தாயினும் தயாவான தத்துவனை கண்ணுதலானை, காமகோபனை, ஆணோ பெண்ணோ அலியோ என்று யாரும் அறியா சிவனை, உண்ணா முலை உமையாளொடு உடனாகிய அண்ணாமலை அண்ணலை, சிவபுராணம் பாடி வணங்கினோம். மற்றவர்கள் அனைவருக்கும் இது தாம் முதல் யாத்திரை அவர்கள் அனைவரும் அடியேனும் அருளாளா, அய்யா, அணங்கின் மணவாளா, ஆனந்த கூத்தா இது போலவே உன் கிரி வலமும் சித்திக்க வேண்டும் என்று மனதார கோரிக்கை வைத்தோம்.  

அருகிலேயே மானசரோவர் ஏரி என்பதால் அங்கிருந்து பல கடற்பறவைகள் பறந்து வந்தன அவற்றுக்கும் அன்னம் பாலித்தோம். அந்த இடத்தில் தற்போது பல கட்டிடங்கள் கட்டிக்கொண்டு இருக்கின்றனர். வரும் காலத்தில் யாத்ரிகள் இங்கேயே தங்கி ஐயனை திவ்யமாக தரிசனம் செய்ய இயலும். சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்து சிவ சக்தியை தியானம் செய்து விட்டு புனித  மானசரோவர் ஏரியின் வலத்தை பேருந்து மூலமாவே துவக்கினோம்.

(தரிசனத்திற்கு காத்திருக்கும் திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களுக்கும் மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் தரிசனம் சித்திக்க அவர்களின் திருப்பாதங்களில் வீழ்ந்து வேண்டிக்கொள்கிறேன்.)


*****************
திருஞான சம்பந்தர் தேவாரம்

திருக்கயிலாயம்

திருக்கயிலாய வாகனத்தில் அகத்தீஸ்வரர்

பாடல் எண் : 2

புரிகொள்சடைய ரடியர்க்கெளியார் கிளிசேர் மொழிமங்கை
தெரியவுருவில் வைத்துகந்த தேவர் பெருமானார்
பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்க விருள்கூர்ந்த
கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலை மலையாரே.

பொருள் : பெரிய யானையை மலைப்பாம்பு விழுங்கி மறையும் இருள்மிக்க கயிலைமலையில் விடம் உண்ட கரியகண்டராய்ச் சிவந்த திருமேனியராய் விளங்கும் இறைவர் வளைத்துக்கட்டிய சடைமுடியை உடையவர். அடியவர்க்கு எளிமையானவர். கிளி போன்ற மெல்லிய மொழி பேசும் உமையம்மையை பலருக்கும் தெரியுமாறு ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்ததேவர் தலைவராவார்.

தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க    http://thevaaram.org/

யாத்திரை தொடரும்....................