Tuesday, February 11, 2020

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 20

யாத்திரை நிறைவு

கிரி வலம் செல்ல அனுமதிக்கதால் ஒரு நாள் முன்னதாகவே காத்மாண்டு வந்து சேர்ந்து விட்டோம்காத்மாண்டிலிருந்து செல்வதற்கு முன்னரே  இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தோம். இங்கு தங்குவதற்கான செலவுகளை சுற்றுலா நிறுவனத்தினர் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறிவிட்டதால் முன்னர் செய்திருந்த முன்பதிவை இரத்து செய்து விட்டு அன்றைய தினமே கல்கத்தா வழியாக வரும் விமானம் மூலம் இந்தியா புறப்பட்டோம்


காத்மாண்டுவிலிருந்து புறப்பட தயார் நிலையில்




காத்மாண்டிலிருந்து கொல்கத்தா பயணம்


கொல்கத்தாவில் ஒரு இனிப்புக்கடையில்


கொல்கத்தா  விமான நிலைய தங்கும் அறை


கொல்கத்தா விமான நிலையம்


கொல்கத்தா காளி ஆலயம்



 

சென்னை திரும்பினோம்


யாத்திரை நிறைவு

கல்கத்தாவிலிருந்து சென்னைக்கான விமானம் மறுநாள்தான் இருந்தது என்பதனால் கல்கத்தாவில் ஒரு இரவு தங்கினோம். கல்கத்தா சென்றதால் காளி மாதாவை தரிசிக்க சென்றோம்.  இவ்வாறாக இவ்வருட யாத்திரை மிகவும் ஏமாற்றம் நிறைந்ததாக முடிவடைந்தது. ஆயினும் ஐயனின் வெள்ளிப்பனி கோலத்தை தரிசிக்கும் பேறு பெற்றோம், கிரிவலம் சென்ற அன்பர்கள் பொன்னார் மேனி தரிசனமும் பெற்றனர். அவனருளால் இனி ஒரு வாய்ப்பு சித்தித்தால் அவ்வனுபவத்தோடு தங்களை சந்திக்கின்றேன் அன்பர்களே.


 திருச்சிற்றம்பலம்.

No comments: