Sunday, February 09, 2020

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 19


மிகவும் சோகத்துடன் டார்ச்சனில் இருந்து புறப்பட்டோம். வழியில் பல பனி மூடிய சிகரங்களைக் கண்ணுற்றோம். நீண்டநேரம் பயணம் செய்து இரவு பத்து மணி அளவில் சாகாவை அடைந்தோம்.   அங்கும் ஒரு ஏமாற்றம்  சாதாரண விடுதியில் தங்க வைத்தனர். மறு நாள் பயணம் எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே



சாகாவில் தங்கிய விடுதி 




சாகா நகரம்





இடையில் ஒரு கணவாய்








இவ்வருட திருக்கயிலாய யாத்திரையின் நிறைநாள் சாகாவில் இருந்து அதிகாலையில் புறப்பட்டு சீன நேபாள எல்லையை நோக்கி பயணம் செய்தோம்கிரி வலம் செல்ல முடியாமல் போனதால் பலரும் மனக்குறையுடனே பயணம் செய்தோம்மேலும் எவ்வாறு ஏமாற்றப்பட்டோம் என்பதால் அது அதிகமாகவே இருந்ததுதிருக்கயிலை நோக்கி சென்ற போது  அவ்வளவு அதிகமாக கவனிக்கவில்லை திரும்பி வரும் போது இரு பக்கமும் பனி சூழ்ந்த பல சிகரங்கள் உள்ளன என்பதைக் கண்டோம்மேலும் சில இடங்களில் மலையைக் குடைந்து  சுரங்கப் பாதைகள் அமைத்துக் கொண்டிருந்ததை கவனித்தோம்இச்சுரங்கங்கள் முடிந்தால் மலை மேல் ஏறி பின் இறங்கி பயணம் செய்வதற்கு  பதிலாக சுரங்கத்தின் வழியாக செல்லும் போது பயண நேரம் மிகவும் குறையும்உயரமான கணவாய்களை அடைந்து பின் கீழிறங்கி பயணம் செய்து நிறைவாக எல்லையை மதிய நேரத்திற்கு அடைந்தோம். கிர்யோங்கில் மதிய உணவு உண்டோம், இங்கு சிறிது நேரம் காலதாமதமானது.  எந்தவித சிரமமும் இல்லாமல் எல்லையைக் கடந்தோம்.










கடவுசீட்டில் வெளியேறுவதற்கான முத்திரை பெற்று சிறு பேருந்து மூலம் காத்மாண்டு நோக்கி புறப்பட்டோம்அப்போது வண்டி ஓட்டுநர்  முன்னர் திருக்கயிலாய யாத்திரிகள் சென்ற கொடாரி நட்புப்பாலம் சரி செய்து விட்டனர்தற்போது சரக்குப் போக்குவரத்து ஆரம்பித்து விட்தனர்அடுத்த வருடம் எப்போதும் போல் யாத்திரிகள் அவ்வழியில் செல்ல முடியும் என்றார்மேலும்  இந்த ருசுவாகதிப் பாதையையும் சீன அரசு மராமத்து  செய்து மேம்படுத்தித்  தர ஒப்புக்கொண்டுள்ளது என்றார்எப்படியோ அன்பர்கள் அதிக சிரமம் இல்லாமல் திருக்கயிலைநாதரை தரிசிக்க முடிந்தால் மகிழ்ச்சியேகாத்மாண்டை அடைந்த போது நள்ளிரவாகி விட்டது.

No comments: